"இயற்கை அதிசயம்"..தீராத நோய் தீர்க்கும் பழனி தண்டாயுதபாணி.. நீதிபதிகள் கூறிய ஆச்சரிய தகவல்கள்
பழனி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்த விபூதியும் சந்தனமும் தீர்த்தமும் நோய்களை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கிறது
சென்னை: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியரின் சீடரான போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பழநியாண்டவர் விக்ரகமும், மலைக்கோவிலும் இன்னும் அப்படியே இருப்பதற்கு எல்லாம் வல்ல சித்தர்களின் மகிமை தான் முக்கிய காரணம். தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்த பாலும் பஞ்சாமிர்தமும் விபூதியும் சந்தனமும் நோய்களை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கிறது என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நம்முடைய பாரத தேசம் சித்தர்கள் வாழும் பூமியாக திகழ்கிறது. இன்றைக்கும் பலநூறு சித்தர்கள் ஜீவ சமாதிகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அகத்தியர், போகர், புலிப்பாணி உள்ளிட்ட சித்தர்களும், சப்தரிஷிகளும் இந்த பூமியில் வாழ்ந்து மக்களுக்காக எத்தனையோ நன்மைகளை செய்திருக்கின்றனர்.
போகர் சித்தர் உருவாக்கிய அதிசயங்களில் ஒன்றுதான் பழனி தண்டாயுதபாணி சுவாமி சிலை. அந்த சிலை பற்றிய பல்வேறு ஆச்சரிய தகவல்களை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலயம் வழிபடுவோர் சங்க தலைவர் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி முருகன் கோவிலில் 48 நாட்கள் மண்டல பூஜை பெயரளவில் நடைபெறுகிறது. ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறவில்லை. இதனால், இந்த கோவிலில் நடைபெற உள்ள தைப்பூச திருவிழா தடைபட வாய்ப்புள்ளது. எனவே, பழனி கோவிலில் ஆகம விதிப்படி பூஜை நடைபெற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது பழனி தண்டாயுதபாணி கோவில் பற்றி பல்வேறு தகவல்களை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள முருகப்பெருமானின் சன்னதி இயற்கை அதிசயங்களில் ஒன்று. கோவிலில் வழங்கப்படும் அபிஷேக பால் மற்றும் பஞ்சாமிர்தத்தை சாப்பிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் நோய்கள் நீங்கியுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது பழனி தண்டாயுதபாணி கோவில் பற்றி பல்வேறு தகவல்களை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பாரத சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள முருகப்பெருமானின் சன்னதி இயற்கை அதிசயங்களில் ஒன்று. கோவிலில் வழங்கப்படும் அபிஷேக பால் மற்றும் பஞ்சாமிர்தத்தை சாப்பிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் நோய்கள் நீங்கியுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
1600களின் முற்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவரைக் கட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனதாகவும், ரோமில் உள்ள கொலோசியமும் கி.பி 70-ல் தான் கட்டப்பட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தாஜ்மஹால் கூட 1631 முதல் 1648ம் ஆண்டு வரை கட்டப்பட்டது. ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கிறிஸ்து பிறப்பதற்கு 3,000 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டவர் என்றும் குறிப்பிட்டனர்.
நவபாஷாணம் எனப்படும் ஒன்பது விதமான மருந்துகளைப் பயன்படுத்தி போகர் என்ற சித்தர் பழனி தண்டாயுதபாணி சிலையை உருவாக்கினார். மருத்துவம், ஜோதிடம், ஆன்மிகம், யோகம் போன்றவற்றில் அறிவைப் பெற்று, நாளடைவில் மனிதர்கள் பலவிதமான கொடிய நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் அந்த நோய்களில் இருந்து மக்களை குணப்படுத்துவதற்காகவே தண்டாயுதபாணி சிலையை செய்து பழனி மலையில் நிறுவியுள்ளார் போகர்.
1,448 அரிய மூலிகைகளைப் பயன்படுத்தி நவபாஷணங்களை உருவாக்கினார், அவை ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலம் கொடிய நோய்களைக் கூட குணப்படுத்தும் திறன் கொண்ட மருந்தாக மாறியது. பொற்கொல்லர்களின் குலத்தில் பிறந்த ஒரு பழம்பெரும் சித்தர் என்பதால், இறுதியாக கலிங்கநாதரின் வழிகாட்டுதலின் கீழ் சித்தபுருஷரானார் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாலும், பஞ்சாமிர்தமும் தண்டாயுதபாணியின் சிலையின் மீது அபிஷேகம் செய்து அதனை சில நிமிடங்களுக்குப் பிறகு யாரேனும் ஒருவர் உட்கொண்டால் அது மனிதனின் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்று போகர் சித்தர் தனது சீடர் புலிப்பாணியிடம் குறிப்பிட்டுள்ளார். அப்படி அபிஷேகம் செய்யப்பட்ட புனித பால் மற்றும் பஞ்சாமிர்தத்தை உட்கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், குணமடைந்துள்ளனர் என்றும் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கூறிய தற்காலிக தலைமை நீதிபதி, போகர் ஜீவ சமாதி அடைந்து தண்டாயுதபாணிசுவாமி சிலைக்கு அடியில் தனக்கென ஒரு அறையை உருவாக்கினார். தண்டாயுதபாணிசுவாமியின் புனிதத் தலத்துக்குச் செல்லும் பக்தர்களும் சித்தரின் ஜீவ சமாதியை தரிசிப்பதில் முழு திருப்தி அடைகிறார்கள், என்று குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.