Thai Amavasai 2025: தை அமாவாசை மகத்துவம்.. சுமங்கலிக்கு இந்த புடவை தந்தால் அதிர்ஷ்டம்: பிரபல ஜோதிடர்
சென்னை: நீர் நிலைகள், கடற்பகுதிகளுக்கு சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், வீட்டிலேயே எள்ளு தர்ப்பணம் செய்யலாம் என்றும், காகங்களுக்கு தனித்தனியாக உணவு வைக்காமல், அனைத்து உணவுகளையும் பிசைந்து காகங்களுக்கு வைக்க வேண்டும் என்றும் ஜோதிடர் ஷெல்வி அறிவுறுத்தியிருக்கிறார்.
தை அமாவாசையை முன்னிட்டு, பிரபல ஜோதிடர் ஷெல்வி, வேந்தர் பக்தி என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த வீடியோவில், தை அமாவாசை நாளில் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

தை அமாவாசை: "தை அமாவாசையன்று கட்டாயமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.. மற்ற தெய்வங்களை வணங்கிவிட்டு, பெற்றோர் மற்றும் முன்னோர்களை வணங்காவிட்டால், அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்கின்றன சாஸ்திரங்கள்..
எனவே, பெற்றோர் இல்லாதவர்கள் கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். நீர்நிலைகளுக்கு செல்ல முடியாவிட்டாலும், வீட்டிலேயே எள்ளு தர்ப்பணமும் செய்யலாம்.. பெற்றோருடன் வசிப்பவர்கள் அமாவாசையன்று அன்னதானம் செய்யலாம். அன்னதானம் செய்பவர்கள் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக செய்திட வேண்டும். அன்னதானமாக செய்ய முடியாதவர்கள் ஏழைகளுக்கு அரிசி வாங்கி தரலாம். இவைகளுடன் சிறிது மிளகு சேர்த்து தர வேண்டும்.
முன்னோர்கள் ஆசி: எறும்பு, பசு, காகம், நாய், பூனை ஆகிய ஜீவராசிகளுக்கு அமாவாசையன்று உணவு வைக்க வேண்டும். இப்படி செய்தால் கடவுளின் ஆசியும், முன்னோரின் ஆசியும் கிடைக்கும்.
அதேபோல, தை அமாவாசை நாளில் மாலையில் செய்ய வேண்டியவைகளையும் கட்டாயம் செய்ய வேண்டும். மாலையில் வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வம் படத்துக்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். பிறகு, குலதெய்வத்துக்கு புடவை வைத்து வழிபட்டு, அதனை யாராவது சுமங்கலிக்கு தருவது மிகவும் விசேஷமானது.. ஆனால், இப்படி சுமங்கலிக்கு தரும்போது, வெள்ளி, செவ்வாய்களில் தரக்கூடாது. அன்னதானத்துக்கு மட்டும்தான், நாள், கிழமை கிடையாது. ஆனால் பொருள் தானம் செய்யும்போது, செவ்வாய், வெள்ளியை தவிர்த்து விட வேண்டும்.
அஷ்ட லட்சுமி: தை அமாவாசை நாளின் மாலை நேரங்களில் இப்படி செய்துவந்தால், தடைபட்டு வந்த மங்கள காரியங்கள் இனி இனிதாக நடக்கும்.. வீட்டில் அமைதி ஏற்படும்.. ஒற்றுமை தழைக்கும்.. அஷ்ட லட்சுமியும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்..
அமாவாசைக்கு காகத்துக்கு உணவு கட்டாயம் வைக்க வேண்டும். அமாவாசைக்கு மட்டுமல்லாமல், தினமும் காகத்துக்கு உணவு வைக்கலாம்.. அமாவாசை நாளில், இலையில் உணவுகளை தனித்தனியாக வைக்கக்கூடாது. வடை, பாயாசம், அப்பளம் என அனைத்தையும் ஒன்றாக பிசைந்து காகத்துக்கு வைக்க வேண்டும்.
பசுமாடு: அதேபோல, பசுமாட்டுக்கும் உணவளிக்க வேண்டும். பெற்றோர், பெரியோர் இருப்பவர்கள் அகத்திக்கீரையை தரக்கூடாது.. எள்ளு புண்ணாக்கும் பெரியவர்கள் உள்ளவர்கள் தரக்கூடாது. மற்றவர்கள் எள்ளு புண்ணாக்கு தரும்போது, அதனுடன் சிறிது வெல்லம் கலந்து தந்தால், மிகவும் அதிர்ஷ்டத்தை தரும்" என்றெல்லாம் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் ஷெல்வி.












Click it and Unblock the Notifications