திருவண்ணாமலை..பரணி தீபம், மகாதீபம் தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் நாளை முதல் பதிவு - ரயில்கள் விபரம்
திருவண்ணாமலை: டிசம்பர் 6ஆம் தேதி பரணி தீபம், மகாதீபம் தரிசனம் செய்வதற்காக டிக்கெட்டுகள் பெற நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்கள் வசதிக்காக தீபத் திருவிழாவையொட்டி வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக நினைத்தாலே முக்தி தரும் திருத் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தீபத் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று காலை 63நாயன்மார்களின் மாட வீதி உலா பவனி நடைபெற்றது. முன்னதாக விநாயகர், சந்திர சேகரர், 63 நாயன்மார்கள் ஆகியோர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

63 நாயன்மார்கள் வீதி உலா
சிவபெருமானுக்குத் தொண்டு செய்த அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர் உள்ளிட்ட 63 நாயன்மார்களை சிறப்பிக்கும் வகையில் 59வது ஆண்டாக தொடர்ந்து மாட வீதி உலா நடைபெற்றது. திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சிவ தொண்டர்கள் என ஏராளமானவர்கள் 63 நாயன்மார்கள் பல்லக்கை சுமந்து மாடவீதியில் வலம் வந்தனர்.

வெள்ளிரத ஊர்வலம்
இதனைத்தொடர்ந்து சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றிரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதத்தில் மாடவீதியில் பவனி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சரத தேரோட்டம்
தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகா தேரோட்டம் இன்று காலை 5.00 மணி முதல் 7 மணிக்குள் தொடங்கியது. விநாயகர் தேரோட்டம், அருணாச்சலேஸ்வரர் தேரோட்டம், பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தி அம்மன் தேர், சிறுவர்கள் மட்டுமே இருக்கும் சண்டிகேஸ்வரர் தேர் எனப் பஞ்ச ரதங்களும் மாட வீதிகளின் வலம் வருவதைக் காண லட்சக் கணக்கானோர் குவிந்துள்ளனர். திருவண்ணாமலையில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளன. 3000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீப திருவிழா தரிசன டிக்கெட்டுகள்
இதனிடையே அருணாசலேசுவரர் கோயிலில் வரும் 6ம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. காலை 4 மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டணம் என்றும், மாலை 6 மணிக்கு மகாதீபத்தை தரிசிக்க 500 மற்றும் 600 என இரண்டு வகை கட்டணங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்களை annamalaiyar.hrce.tn.gov.inஎன்ற கோயில் இணையதள முகவரியில் நாளை காலை 10 மணி முதல் பதிவு செய்யலாம் என்றும், ஆன்லைன் டிக்கெட் பெற ஆதார் எண், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை 1800 425 3657 என்ற எண்ணிலும் அறிந்து கொள்ளலாம் என்றும், ஆன்லைன் மூலம் நன்கொடை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

சிறப்பு ரயில்கள்
பக்தர்கள் வசதிக்காக தீபத் திருவிழாவையொட்டி வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அத்துடன் வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதே நாட்களில் புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

எங்கிருந்து எத்தனை ரயில்கள்
6 மற்றும் 7ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை இடையே 4 சிறப்பு ரயில்களும் இதேபோன்று 6 மற்றும் 7ம் தேதிகளில் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 4 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. அதேபோல தாம்பரம் மற்றும் திருவண்ணாமலை இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள ஆட்சியர், இதனை அனைத்து பக்தர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications