Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நேரத்தில் மகிழ்ச்சியான செய்தியை கூறிய ஷபானா மற்றும் ரேஷ்மா.. குவியும் வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகைகளான ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு தாங்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்ட மகிழ்ச்சியில் ரசிகர்களோடு பகிர்ந்து உள்ளார்கள்.

செம்பருத்தி சீரியல் முடிவடைந்த வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஷபானாவின் லேட்டஸ்ட் அப்டேட் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

தோழிகளின் அடுத்தடுத்த திருமணம்

தோழிகளின் அடுத்தடுத்த திருமணம்

ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலமாக கதாநாயகியாக பலருக்கும் பரிச்சயமான ஷபானா மற்றும் ரேஷ்மா இவர்கள் இருவரும் சீரியலை தாண்டியும் நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தற்போது தான் இவர்கள் இருவரும் திரை துறையில் இருக்கும் நடிகர்களை திருமணம் செய்துள்ளனர். ஷபானா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதேபோல ரேஷ்மாவும் தொகுப்பாளரும் நடிகருமான மதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஜீ தமிழ் நட்பு

ஜீ தமிழ் நட்பு

நடிகைகளில் நட்பாக இருப்பது ஒரு சிலர்கள் தான். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் பொறாமைப்படும் அளவிற்கு நட்பாக இருக்கும் ஜீ தமிழ் நடிகைகளில் ரேஷ்மா, ஷபானா, சைத்ரா ரெட்டி, நட்சத்திரா என ஒரு கூட்டணி எப்பொழுதும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தனர். இவர்கள் கொரோனா காலகட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் வேற லெவலில் வைரலானது. பல பெண்கள் இவர்களுடைய போட்டோக்களை தான் தங்களுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக கூட சாங் எடிட் பண்ணி வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களுடைய நட்பு எப்போதும் போல தொடர்ந்து கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளத்தில் இவர்களைப் பற்றி பல வதந்தி செய்திகளும் பரவிக் கொண்டு இருக்கிறது.

முன்பு போல இல்லையே

முன்பு போல இல்லையே

நட்பு கூட்டணியில் சைத்ரா ரெட்டிக்கு முதலில் திருமணம் முடிந்தது. அப்போது மற்ற தோழிகள் எல்லோரும் சேர்ந்து அடித்த லூட்டி வேற லெவலில் வைரலாக பரவி வந்தது. அதற்கு பிறகு ஷபானா மற்றும் ஆரியன் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. அதற்கு அடுத்ததாக நடைபெற்ற ரேஷ்மா மற்றும் மதன் திருமணத்தில் அந்த அளவிற்கு இவர்கள் லூட்டி அடித்து எடுத்த போட்டோக்கள் வெளியாகவில்லை. இவர்களைத் தொடர்ந்து தற்போது நட்சத்திராவும் சின்னத்திரையை சார்ந்த ஒருவரை எளிமையான முறையில் திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் இவர்கள் முன்பு போல போட்டோக்கள் வெளியிடவில்லை என்று இவர்களுடைய ரசிகர்கள் பீல் பண்ணி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதிய திரைப்படத்தில் கூட்டணி

புதிய திரைப்படத்தில் கூட்டணி

நால்வர் கூட்டணியில் தற்போது ஷபானா மற்றும் ரேஷ்மா மற்றும் ஒன்றாக சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இவர்கள் இருவரும் 'பகையே காத்திரு' எனும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ரசிகர்களிடம் தெரிவித்து இருக்கிறார்கள். ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் ஒரே நேரத்தில் ஒரே படத்தில் கமிட் ஆகி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம். அதுபோல இந்த திரைப்படத்தில் இவர்கள் ஒரு சில சீன்களில் நடித்தாலும் நட்பை மேருகேற்றும் விதமாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது என்று கூறி வருகிறார்கள். எப்படியோ சின்னத்திரையிலே மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த இவர்கள் வெள்ளித்திரையிலும் காலடி எடுக்க எடுத்து வைக்க தொடங்கி இருக்கிறார்கள். இது இவர்களுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதானாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+