ஒரே நேரத்தில் மகிழ்ச்சியான செய்தியை கூறிய ஷபானா மற்றும் ரேஷ்மா.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சின்னத்திரை நடிகைகளான ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்கள்.
பல வருடங்களுக்குப் பிறகு தாங்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்ட மகிழ்ச்சியில் ரசிகர்களோடு பகிர்ந்து உள்ளார்கள்.
செம்பருத்தி சீரியல் முடிவடைந்த வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஷபானாவின் லேட்டஸ்ட் அப்டேட் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

தோழிகளின் அடுத்தடுத்த திருமணம்
ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலமாக கதாநாயகியாக பலருக்கும் பரிச்சயமான ஷபானா மற்றும் ரேஷ்மா இவர்கள் இருவரும் சீரியலை தாண்டியும் நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தற்போது தான் இவர்கள் இருவரும் திரை துறையில் இருக்கும் நடிகர்களை திருமணம் செய்துள்ளனர். ஷபானா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதேபோல ரேஷ்மாவும் தொகுப்பாளரும் நடிகருமான மதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஜீ தமிழ் நட்பு
நடிகைகளில் நட்பாக இருப்பது ஒரு சிலர்கள் தான். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் பொறாமைப்படும் அளவிற்கு நட்பாக இருக்கும் ஜீ தமிழ் நடிகைகளில் ரேஷ்மா, ஷபானா, சைத்ரா ரெட்டி, நட்சத்திரா என ஒரு கூட்டணி எப்பொழுதும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தனர். இவர்கள் கொரோனா காலகட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் வேற லெவலில் வைரலானது. பல பெண்கள் இவர்களுடைய போட்டோக்களை தான் தங்களுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக கூட சாங் எடிட் பண்ணி வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களுடைய நட்பு எப்போதும் போல தொடர்ந்து கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளத்தில் இவர்களைப் பற்றி பல வதந்தி செய்திகளும் பரவிக் கொண்டு இருக்கிறது.

முன்பு போல இல்லையே
நட்பு கூட்டணியில் சைத்ரா ரெட்டிக்கு முதலில் திருமணம் முடிந்தது. அப்போது மற்ற தோழிகள் எல்லோரும் சேர்ந்து அடித்த லூட்டி வேற லெவலில் வைரலாக பரவி வந்தது. அதற்கு பிறகு ஷபானா மற்றும் ஆரியன் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. அதற்கு அடுத்ததாக நடைபெற்ற ரேஷ்மா மற்றும் மதன் திருமணத்தில் அந்த அளவிற்கு இவர்கள் லூட்டி அடித்து எடுத்த போட்டோக்கள் வெளியாகவில்லை. இவர்களைத் தொடர்ந்து தற்போது நட்சத்திராவும் சின்னத்திரையை சார்ந்த ஒருவரை எளிமையான முறையில் திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் இவர்கள் முன்பு போல போட்டோக்கள் வெளியிடவில்லை என்று இவர்களுடைய ரசிகர்கள் பீல் பண்ணி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதிய திரைப்படத்தில் கூட்டணி
நால்வர் கூட்டணியில் தற்போது ஷபானா மற்றும் ரேஷ்மா மற்றும் ஒன்றாக சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இவர்கள் இருவரும் 'பகையே காத்திரு' எனும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ரசிகர்களிடம் தெரிவித்து இருக்கிறார்கள். ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் ஒரே நேரத்தில் ஒரே படத்தில் கமிட் ஆகி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம். அதுபோல இந்த திரைப்படத்தில் இவர்கள் ஒரு சில சீன்களில் நடித்தாலும் நட்பை மேருகேற்றும் விதமாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது என்று கூறி வருகிறார்கள். எப்படியோ சின்னத்திரையிலே மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த இவர்கள் வெள்ளித்திரையிலும் காலடி எடுக்க எடுத்து வைக்க தொடங்கி இருக்கிறார்கள். இது இவர்களுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதானாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications