நிரூப்பை சேர்த்துக் கொள்ள மறுத்த பிரியங்கா...இனி தனியாகவே விளையாடுவதாக முடிவு
சென்னை: பிரியங்கா இப்போதான் சரியான முடிவு எடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ஒருவழியாக பிரியங்கா தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்து விட்டார் என அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அபிஷேக் வெளியே சென்றதும் பிரியங்காவிற்கு ஞான உதயம் வந்துவிட்டது போல என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

விளையாட்டு மாறி போச்சு
ஆரம்பத்தில் பிரியங்கா இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சுய கேரக்டரில் இருந்து கொண்டிருக்கிறார் என்று இவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இவருடைய கலகலப்பும் அடுத்தவர்களை மகிழ்விக்கும் குணமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எப்போதுமே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர் விளையாட்டு வேறுவிதமாக போய்விட்டது என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

புரிந்துகொண்ட பிரியங்கா
ஆரம்பத்தில் இருந்த போட்டியாளர் உடன் கூட்டணி வைக்காமல் தன்னுடைய தன்னிச்சையான முடிவுகளால் ஜொலித்து வந்த இவர், நாட்கள் செல்ல செல்ல அபிஷேக் மற்றும் நிரூப்புடன் கூட்டு சேர்ந்து விட்டார். அதற்குப் பிறகு இவர்கள் மூவரும் செய்யும் செயல்கள் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் முகம் சுளிக்க வைத்து விட்டது. அதுவும் இதுவரைக்கும் இருந்த நல்ல பெயர் இவருக்கு அப்படியே சரிய தொடங்கிவிட்டது.

மனம் மாறிய தருணம்
நல்லவேளையாக அந்த நேரத்தில் அபிஷேக் இவரை விடவும் அதிகமாக ஆட்டம் போட்டு விட்டார் என்று அவரை ரசிகர்கள் வெளியே தூக்கி விட்டார்கள். இதனை புரிந்து கொண்ட பிரியங்கா, அந்த நேரத்தில் நிரூம்பின் சுய ரூபத்தையும் புரிந்துகொண்டார். காயின் டாஸ்க்கில் அவர் நடந்து கொண்டது பிரியங்காவை ரொம்பவே பாதித்து இருக்கிறது. ஆனாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள்ளே வைத்துக்கொண்டு பிரியங்கா அவரிடம் பழையபடி நெருக்கத்தைக் காட்டாமல் தவிர்த்து வருகிறார்.

திடீர் முடிவு
ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் இதையேதான் சொல்லி கொண்டிருந்தனர். ஆனால் தற்போது பிரியங்கா அதை செய்ய ஆரம்பித்ததும் மீண்டும் பிரியங்காவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. நேற்றைய எபிசோட்டில் பிரியங்கா தனியாக அமர்ந்து கொண்டு கதை எழுதிக் கொண்டிருக்கும் போது, நானும் வருகிறேன் என்று அவருடைய விளையாட்டில் பங்கு எடுத்துக் கொள்ள விரும்பிய நிரூப்பை வேண்டாம் இனி நான் தனியாகவே விளையாடி விடுகிறேன் என்று இவர் கூறியது தான் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது. தற்போது அதைப் பற்றி தான் ரசிகர்கள் அதிகமாக மீன்ஸ்களையும் போட்டு வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications