Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் சீசன் 6: அம்மாவின் அன்பிற்காக போட்டியாளராக அறிமுகம் ஆகும் திருநங்கை சிவின் கணேசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் புது முயற்சி ஆக பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ள நினைக்கிறோம் என்பதை விளக்கி வீடியோவை அனுப்பி வைத்துள்ளார்கள்.

இதில் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பிக் பாஸ் தேர்ந்தெடுப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் திருநங்கை சிவின் கணேசன் ஒருவராக இருக்கிறாராம்.

ஆறாவது சீசன் தொடக்கம்

ஆறாவது சீசன் தொடக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. கடந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு டிஆர்பி கிடைக்காததால் இந்த சீசனில் எப்படியும் ரசிகர்களை கவரும் விதமாக இருக்க வேண்டும் என்று பல புது விதமான யுக்திகளை கையாண்டு உள்ளனர். அதில் பிக் பாஸ் வீடு போட்டியாளர்கள், போட்டிகள் என பலவற்றும் அடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. வழக்கத்தை விட இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

புது முயற்சி

புது முயற்சி

முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தாங்கள் எதனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறோம் என்பதை ஒரு வீடியோவாக பதிவிட்டு பிக் பாஸ் இருக்கு அனுப்ப பிக் பாஸ் ப்ரோமோவில் கமல் கூறி இருந்தார். அதுபடி ரசிகர்கள் பலர் வீடியோக்களை அனுப்பி இருக்கிறார்களாம். அந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பிக் பாஸ் தேர்வு செய்திருக்கிறதாம். திரை பிரபலங்கள் ஒரு சிலரும் எந்த வகையிலும் பிரபலம் இல்லாமல் இருக்கும் போது மக்கள் ஒரு சிலரும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

அறிமுகமாகும் புது நபர்

அறிமுகமாகும் புது நபர்

அதன்படி இதில் திருநங்கை ஒருவர் கலந்து கொள்ள இருக்கிறாராம். ஏற்கனவே கடந்த சீசனில் நமீதா மாரிமுத்து கலந்து கொண்டிருந்தார். அவருடைய சோக கதையை கேட்ட ரசிகர்கள் பலர் திருநங்கைகள் மீது இருந்த கருத்தை மாற்றிக் கொண்டனர். அது மட்டும் அல்லாமல் திருநங்கைகளின் வலிகளை பற்றி புரிந்து கொள்ளவும் செய்திருந்தார்களாம். அதனால் இந்த முறையும் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் சிவின் கணேசன் என்பவராம். வீட்டுக்கு ஒரே பையனாக இருப்பவராம். வீட்டில் இவரது உணர்வுக்கும், விருப்பத்திற்கும் ஆதரவு கிடைக்கவில்லையாம். எனவே வேலை தேடி இவர் சிங்கப்பூருக்கு சென்று விட்டாராம். ஆனால் அங்கே சென்ற பிறகு இவருக்கு அங்கே பிடிக்காததால் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே அங்கே இருந்து விட்டு மீண்டும் இந்தியாவிற்கு வந்து விட்டாராம்.

ஏக்கம் பெருசு தான்

ஏக்கம் பெருசு தான்

சிவில் கணேஷ் இந்தியாவிற்கு மீண்டும் திரும்பி வந்தது அவருடைய அம்மாவிற்கு பிடிக்கவில்லையாம். எனவே அம்மாவை இதுவரை அவர் சந்திக்கவே இல்லையாம். ஹெச். சி. எல் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறார். இவரும் தற்போது பிக் பாஸ் போட்டியில் பங்குபெற்று இருக்கிறதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் போட்டியில் தான் பங்கேற்பதை பார்த்து இதுவரை பேசாத இவருடைய அம்மா தன்னிடம் பேசுவார் என்று நம்பி இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+