வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கமலை 'ஓட்டிய' சிவகார்த்திகேயன் இப்போ அவர் படத்தில்..சூப்பர்ல்ல
சென்னை:பிக் பாஸ் சீசன் 5 ன் இறுதிப்போட்டி நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், தான் அடுத்ததாக கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் முதன்முதலாக படம் நடிக்க இருப்பதையும்,அது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
இன்று கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பது சாதாரணமாக தெரிந்தாலும்... 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் வந்த சமயத்தில் சிவகார்த்திகேயன்-கமல் ரசிகர்கள் இடையே நடந்த மோதல் குறித்தும் இன்று இருவரும் இனைந்து ஒரு படத்தில் பணிபுரிவது குறித்தும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

மோதல் வரை கொண்டு விட்டது
சாதாரண மிமிக்ரி கலைஞனாக இருந்து தன் கடின உழைப்பால் இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகனாக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், ஆரம்ப காலத்தில் தன் மேடை நிகழ்ச்சிகளில் பல நடிகரை போல் மிமிக்ரி செய்து கிண்டல் கேலி செய்து இருந்தாலும் அதை யாரும் சீரியசாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.ஆனால் ஒரு திரை நட்சத்திரமாக உயர்ந்த பின்பு தன் படத்தில் பிற நடிகரை இமிடேட் செய்வதை அந்த நடிகரின் ரசிகர்கள் அவ்வளவு எளிதாகவும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை சிவகார்த்திகேயன் அப்போது அறிந்திருக்கவில்லை. அப்படித்தான் கமலை தன் ரஜினி முருகன் படத்தில் ஒரே ஒரு டயலாக்கில் கிண்டல் பண்ண போக.. அது மோதல் வரை கொண்டு விட்டது..!!

விரக்தியில் கமல்
விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டின் போது பல திசைகளிலிருந்து பல பிரச்சினைகளை சந்தித்த கமல், விரக்தியின் உச்சத்தில் "இந்த நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை" என்று கூறினார். அவர் அப்படிக் கூறியது அந்த நேரத்தில் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் அனைவரையுமே அதிர்ச்சியும் வருத்தமும் அடைய செய்தது.

எளிதாக கமல் ரசிகர்கள் எடுத்துக்கொள்ளவில்லை
இப்படி உணர்வுபூர்வமாக பத்திரிக்கையாளர்களிடம் கமல் பேசிய வசனத்தை, சிவகார்த்திகேயன் தான் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு சீனில் "தங்கள் ஊரில் ரெக்கார்ட் டான்ஸ் நடத்தவில்லை என்றால் இந்த நாட்டை விட்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று நக்கல் செய்வது போல் கூறியிருந்தார்.சிவகார்த்திகேயன் அந்த டயலாக்கை கமல் அவர்களை மனதில் வைத்து கூறினாரோ..!!?? அல்லது எதேச்சையாக கூறினாரா..!!?? என்று தெரியவில்லை.ஆனால் இதை அவ்வளவு எளிதாக கமல் ரசிகர்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

கமல்- சிவகார்த்திகேயன் இணைந்த படம்
திருச்செந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் தாக்க முயலும் அளவிற்கு சென்று விட்டது. ஆரம்பத்திலிருந்தே தன்னை ரஜினி ரசிகராக மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு கமல் ரசிகர்களுடன் இந்த அளவிற்கு பிரச்சனை நடந்து இருந்தும், கமல்- சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து படம் எடுப்பது குறித்து இருவரின் பெருந்தன்மையையும் ரசிகர்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications