பிக் பாஸ் தமிழ் 5:மேடையில் சொல்லாத வார்த்தை... சமூக வலைத்தளத்தில் ராஜுவின் செயல்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் வெற்றி பெற்று வெளியே வந்துள்ள ராஜு சமூகவலைதளத்தில் முதல்முறையாக பதிவிட்ட போஸ்ட் பலரையும் கவர்ந்துள்ளது.
ராஜுவின் போஸ்ட்க்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐந்தாவது சீசனின் வின்னர்
நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆக தேர்வாகி இருக்கும் ராஜு சமூகவலைத்தளத்தில் முதல்முறையாக போஸ்ட் போட்டுள்ளார். இது பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. ஒரு பக்கம் ரசிகர்களின் மத்தியில் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் இதை செய்ய மாட்டேன் என்று கூறிய அதே ராஜூவா இப்படி செய்திருக்கிறார் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

அதிகரிக்கும் பட வாய்ப்புகள்
சின்னத்திரையில் காமெடி நடிகராக அதுவும் சைடு கேரக்டரில் அறிமுகமாகி, தற்போது பட்டிதொட்டியெல்லாம் கலக்கிக் கொண்டிருக்கும் ராஜு சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும், இவர் மீண்டும் சின்னத்திரையில் வருவாரா??என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்துவருகிறது. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இவருக்கு மூன்று படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொண்டாடும் ரசிகர்கள்
தன்னுடைய திறமையை காட்டுவதற்காக ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் கிடைக்காதா? ? என்றுதான் பலரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். தற்போது பல வருட போராட்டம் நிறைவேறி உள்ளது. இவருடைய திறமையை பலரும் பார்த்து ரசித்துள்ளனர். அதனால் இனி இவர் திரையில் ஜொலிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று பலரும் கருத்துக்களையும், ஆசீர்வாதங்களையும் இவருக்கு அள்ளிக் குவித்து வருகிறார்கள். ரசிகர்களின் பேராதரவோடு இந்த சீசனில் வெற்றி அறிவிக்கப்பட்டதும் தங்கள் வீட்டில் ஒருவர் ஜெயித்தது போல பல ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
Recommended Video

முதல் போஸ்ட்
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் வெற்றிக் கோப்பையை கையில் ஏந்தியபடி நான் என்னுடைய ரசிகர்களுக்கு நன்றி கூற மாட்டேன் அவர்களுக்கு பிடித்தமாதிரி பல செயல்களை தான் செய்வேன் என்று உருக்கமாக கூறி இருந்தார். இதைக் கேட்டு பலரும் ஃபீல் பண்ணி வந்தனர். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தமிழ் மக்களே என்று கேப்ஷனோடு இவர் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். இதற்கு பலர் வாழ்த்துக்களை கூறி வந்தாலும், பலர் நன்றி கூறி தங்களை பிரிக்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications