இதையெல்லாம் யோசிக்கவே மாட்டீங்களா? அசீம் எப்படி 25 லட்சம் தருவீங்க? நெட்டிசன்கள் கலாய்ப்பு
அசீம் தான் ஜெயித்த 50 லட்சம் பணத்தில் 25 லட்சம் பணம் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கொடுப்பேன் என்று கூறியதை தொடர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் வின்னரான அசீம் தான் ஜெயித்த பணத்தில் பாதி 25 லட்ச பணத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த பள்ளி குழந்தைகளுக்கு செலவழிப்பேன் என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே இந்த சீசனில் டைட்டில் வின்னர் அசீம் என்பதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் அதிகமானோர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் கொடுக்கும் 50 லட்சத்தில் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து பார்த்தால் 35 லட்சம் தான் வரும் இதில் எப்படி 25 லட்சத்தை அசீம் கொடுப்பார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அசீம் ஜெயிக்க கூடாது என நினைத்த காரணத்தை பற்றி பேசிய விக்ரமன்.. அதே மாதிரி ஆயிடுச்சு என வருத்தம்
குறையாத கருத்து மோதல்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு சில நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியை பற்றிய பரபரப்பு குறைந்த பாடு இல்லை. காரணம் இந்த நிகழ்ச்சியின் கடைசியில் அசீமுடைய வெற்றியை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் அசீமுடைய ரசிகர்கள் தாங்கள் ஓட்டு போட்டு தான் தங்களுக்கு பிடித்த அசீம் ஜெயித்தார் என்று அவர்கள் ஒரு பக்கம் விக்கிரமனை தாக்கியும் அசீமை கலாய்ப்பவர்களை தாக்கியும் சமூக வலைத்தளத்தில் பதில் வெளியிட்டு வருகிறார்கள்.
அசீம் கூறிய உறுதி
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரே ஒரு வீடியோவை மட்டும்தான் அசீம் வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு ஓட்டு அளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறி தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சொன்னபடியே தான் ஜெயித்த பணம் 50 லட்சத்தில் 25 லட்சத்தை ஓபன் அக்கவுண்ட் ஓபன் செய்து, அதில் கொரோனாவால் பெற்றோரை இழந்த பள்ளி குழந்தைகளின் செலவுகளுக்கு பயன்படுத்துவதாகவும் அதில் யாருக்கெல்லாம் உதவி செய்யப்படுகிறது அவர்களுடைய தகவல்கள் பெயர் மட்டும் மறைக்கப்பட்டு தெரிவிக்கப்படும் என்றும் அவர்களுக்கு தனியாக ஒரு சமூக வலைதள பக்கம் பயன்படுத்தி அதில் அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
அது எப்படி முடியும்
இந்த நிலையில் அது எப்படி அசீம் ஆல் 25 லட்சம் கொடுக்க முடியும். அசீம் ஜெயித்தது 50 லட்சம் ரூபாய் என்றாலும், அதில் ஜிஎஸ்டி எல்லாம் கழித்து மீதம் இருப்பது குறைந்தது 35 லட்சம் தான் வரும். அதில் எப்படி 25 லட்சத்தை அசீம் கொடுத்து விட்டு போவார் என்று சிலர் கேள்வி எழுப்ப, இதுவெல்லாம் தெரியாமலா அசீம் அப்படி கூறுவார். அவருக்கு செய்ய வேண்டும் என்கிற மனது இருப்பதால்தான் அதை பொதுவெளியில் எவ்வளவு தைரியமாக கூறுகிறார். ஆனால் அதிலும் இப்படி செய்வதற்கு முன்பே சந்தேகங்களை எழுப்புகிறார்களே? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
பதில் சொல்வாரா அசீம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரன்னரான விக்ரமன் தொடர்ந்து பல சேனல்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அசீம் ஒரே ஒரு வீடியோவை மட்டும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு பிறகு எந்த சேனலிலும் பேட்டி கொடுக்கவில்லை என்று அவருடைய ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். நெட்டிசன்கள் அதிகமாக அசீமைக் கலாய்த்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கெல்லாம் பதில் சொல்வாரா? அசீம் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.