பிரேக்கப் காரணம்!? ரச்சிதாவை குறித்து தன் காதலி சொன்னது இதுதான்! உளறிய ராபர்ட் மாஸ்டர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு ராபர்ட் மாஸ்டர் வெளியே வந்த பிறகு ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்ததற்கெல்லாம் மொத்தமாக பதில் சொல்லி சேனல்களுக்கு போட்டி போட்டு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருக்கும் ராபர்ட் மாஸ்டர் இடம் பலரும் உங்களுக்கு பிரேக்கப் ஆகிவிட்டதா? என்று கேட்டு வருகிறார்கள். அதை குறித்து உண்மையை விளக்கி இருக்கிறார்.

மோதிரத்தால் வந்த பயம்
டான்ஸ் மாஸ்டராக இருக்கும் ராபர்ட் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் 50 நாட்களில் இவர் வெளியேறிய நிலையில் உள்ளே அதிகமாக ரச்சிதாவோடு இவர் சுற்றிக்கொண்டிருந்ததை குறித்து பல்வேறு கேள்விகளும் கிண்டல்களும் எழுந்து வந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அவர் அதற்கெல்லாம் விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் இருக்கும்போது அவருடைய காதலி அவர் ஆசையாக கொடுத்த மோதிரத்தை திருப்பி கொடுத்து இருந்தார். அதனால் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே குயின்சி இடம் எனக்கு பிரேக்கப் ஆகிவிட்டதோ என்னை வேண்டாம் என்று சொல்வதற்காக தான் இப்படி திருப்பி அனுப்பி இருக்கிறாளோ? அல்லது நான் செய்வது வெளியே தவறாக போகிறதோ என்று பல்வேறு கேள்விகளோடு புலம்பி கொண்டு இருந்தார்.

காதலியின் விளக்கம்
ராபர்ட் மாஸ்டரின் புலம்பலை பார்த்த ரசிகர்கள் வெளியே வந்த பிறகு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக அவரிடம் கேள்வி கேட்டு இருக்கின்றனர். அதற்கு அவர் வெளியே வந்ததும் முதல் வேலையாக அவருடைய காதலியை தான் சென்று பார்த்தாராம். அப்போது அவருடைய காதலி நான் உனக்கு இருக்கிறேன் என்று சொல்வதற்காக தான் இந்த மோதிரத்தை கொடுத்து அனுப்பினேன். யார் எதையும் பற்றி கவலைப்படவில்லை .நம்பவும் இல்லை. அதுபோல உன்னை எப்போதும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார் என்று ராபர்ட் நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.

அது பொய் பாஸ்
இந்த நிலையில் நீங்கள் ரச்சிதாவோடு பழகி வந்ததை பார்த்து உங்கள் காதலி ஒன்றும் சொல்லவில்லையா? என்று கேட்டதற்கு எனக்கு உன்னை பற்றி நல்லாவே தெரியும் உள்ளே நேரம் போக வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்து கொண்டிருக்கிறாய், அதே நேரத்தில் ரச்சிதா வெளியே வந்த பிறகு என்னோடு பேசினால் நான் பேசுவேன். இதே போலத்தான் எப்பவும் பழகிக் கொண்டு இருக்கலாம் என்றும் கூறினாராம். தன் மீது தன் காதலிக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று பெருமையோடும் கூறிக் கொண்டிருக்கிறாய். இதே நேரத்தில் சமூக வலைத்தளத்தில் ராபர்ட் மாஸ்டரின் காதல் பிரேக் அப் ஆகிவிட்டது என்ற தகவல் பரவி வருகிறது அது எல்லாம் பொய் என்று கூறியிருக்கிறார்.

தப்பான அர்த்தத்தில் இல்லையாம்
பிக் பாஸ் வீட்டிற்குள்ளே நான் ரச்சிதாவோடு அதிகமாக பழகுவதற்கு காரணம் அவரை எனது பிடித்திருந்தது அது மட்டும் தான். அதை தாண்டி நான் காதலிக்கும் விஷயத்தை ஏற்கனவே ரச்சிதாவிடம் கூறியிருக்கிறேன். என்னுடைய காதலி பெயர் அவர்,எங்கே இருக்கிறார்? என எல்லா தகவல்களும் தெரியும். அதுபோல ஒரு போன் நம்பர் வேண்டும் என்றால் நான் எப்படி வேணாலும் ரச்சிதாவின் நம்பரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இப்படி லைவில் கேட்டு பெற வேண்டிய அவசியம் இல்லை. சும்மா விளையாட்டாக தான் அப்படி செய்து கொண்டிருந்தேன். அதுபோல நான் முத்தம் கேட்டதும் எந்த ஒரு தப்பான அர்த்தத்தில் இல்லை என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications