பிக்பாஸ்க்காக மேலும் கடன் வாங்கியிருக்கிறேன்...தாமரையின் கதறல்.. இவ்வளவு பணமா செலவாச்சு
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் தாமரைச்செல்வி தன்னுடைய அன்றாட வாழ்க்கையைப் பற்றி கூறியிருக்கிறார்.
அல்டிமேட் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதற்காக கடன் வாங்கி செலவு செய்து இருப்பதாகவும் தன்னுடைய சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடங்கிய அல்டிமேட் நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்ந்து அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று இந்த நிகழ்ச்சி இருந்தாலும் இதில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு இருப்பது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பாக இருந்து வருகிறது. இதில் ஒவ்வொரு சீசனிலும் இதற்கு முன்பு கலந்து கொண்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வதால் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக இருந்து வருகின்றனர்.

அது எல்லாம் பொய்யாம்
vதற்போது பிரமாண்டமாக நடந்துமுடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களுக்கு தற்போது பரிச்சயமான முகமாக மாறி இருக்கும் தாமரைச்செல்வி கிராமத்து பின்னணியில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதியும் இல்லாத ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து இவர் இன்று பலருக்கும் பரிச்சயமான முகம் ஆக மாறி இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவருக்கு அதிகமாக கடன் இருந்து உள்ளதாம், ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இவர் அதிகமாக சம்பாதித்து விட்டதாக பலரும் கூறி வருகிறார்கள் அது எல்லாம் பொய் என்று கூறியிருக்கிறார்.

நிஜமாகவே அது இல்லையாம்
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒருமுறை ஒரு டாஸ்க் நடைபெற்றது. அதில் தாமரைச்செல்வி அணி வெற்றி பெற்றது. அப்போது அவருக்கு அடுப்பு பரிசாக அளிக்கப்பட்டது. அப்போது எங்க வீட்டில் இந்த அடுப்பு இல்லை என்று சந்தோஷமாக அவர் கூறியிருந்தார். ஆனால் அதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பல நெகட்டிவ் கமெண்டகள் எழுந்து வந்தது. அது எப்படி அடுப்பு இல்லாமல் இருக்கும் என்பது பலருடைய வாதமாக இருந்தது. அதை பற்றி நேற்றைய எபிசோட்டில் தாமரைச்செல்வி சக போட்டியாளர்கள் இடம் வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார். உண்மையில் தன் வீட்டில் இந்த மாதிரி அடுப்பு இருந்தது கூட கிடையாதாம்.

இவ்வளவு கடனா
தன்னுடைய அம்மா வீட்டிலும் இன்னும் விறகு அடுப்பில் தான் சமையல் செய்து கொண்டிருக்கிறார்களாம். அதனால் தான் தனக்கு அடுப்பு பரிசு கிடைத்ததும் உண்மையில் அந்த எக்ஸ்பிரஷன் காட்டி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனக்கு ஏற்கனவே கடன் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மேலும் இரண்டு லட்சம் கடன் வாங்கி தான் டிரஸ் நகைகள் எல்லாம் வாங்கி இருக்கிறாராம். இந்த நிலையில் தான் இருக்கும் போது தன்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பல்வேறு வதந்திகள் கிளம்பி வருவதை நினைக்கும் போது சிரிப்பாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications