சந்தோஷமா சொன்னாரே நடிகர் பாலா.. புது மனைவியே மொத்த சொத்தாமே! இப்ப ரூ.15 லட்சம் இன்சூரன்ஸ் வில்லங்கம்
சென்னை: தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்காகவே, நடிகர் பாலா 4வது திருமணம் செய்துள்ளதாக, சோஷியல் மீடியாவில் விமர்சனங்களும், சலசலப்புகளும் எழுந்தவாறே உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில், பாலா மீது போலீஸ்வரை ஒரு புகார் சென்றிருக்கிறது.. என்ன நடந்தது?
சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருந்த பாலா, "மறுபடியும் முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன். தன்னுடைய ரூ.250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு" என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று கேரள மாநிலம் கழூர் பாவக்குளம் கோவிலில் தன்னுடைய உறவினர் கோகிலா என்ற தன்னுடைய உறவுக்கார பெண்ணை மறுமணம் செய்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு, Galatta சேனலுக்கு நடிகர் பாலா தம்பதியினர் பேட்டி தந்திருந்தனர்.. அந்த பேட்டியில், பாலா சொல்லும்போது, ரூ.250 கோடி சொத்துக்காகத்தான் இந்த திருமணம் நடந்ததாக கூறுகிறார்களே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பாலா, "நான் எதுக்கு அவங்களுக்கெல்லாம் பதில் சொல்லணும்? என்னுடைய மனசாட்சிக்கு தெரியும்.. அப்படியே இருந்தாலும் அதில் என்ன தப்பு? நான் கடந்த 25 வருஷமாக சமூக சேவை செய்துட்டு இருக்கேன். இப்போகூட, ஒரு நபருக்கு, ஹார்ட் ஆபரேஷனுக்கு நிதியுதவி செய்துட்டுதான் வந்திருக்கேன்.. எங்கள் வீட்டு பக்கத்தில், பள்ளிக்கூடம் ஒன்றை கட்டித்தந்துள்ளேன்.
400 கோடி சொத்துக்கள்
என்னுடைய பணம், காசு, சொத்து எதுவானாலும், அது நல்லவிதத்தில் பிறருக்கு பயனுள்ள வகையில் போய் சேரும். நாளைக்கு எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தாலும், அதுவும் இந்த லட்சியங்களையே ஃபாலோ செய்யும்.. பாலாவுக்கு 300 கோடி சொத்து, 400 கோடி சொத்து இருப்பதாக சொல்கிறார்கள்.. என் எல்லா சொத்தும் என் கோகிலாதான்" என்று கூறியிருந்தார்.
பாலா ஏற்கனவே, கடந்த 2010ம் ஆண்டு பிரபல மலையாள பாடகி அமிர்தா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் அவருக்கு ஒரு மகள் உண்டு. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, அமிர்தா சுரேஷை பாலா விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2வதாக திருமணம் செய்த எலிசபெத் என்பவரையும் பாலா விவாகரத்து செய்தார்.
பாலா மீது முதல் மனைவி புகார்
தொடர்ந்து கடந்த வருடம் 3வதாக தன்னுடைய மாமன் மகளை திருமணம் செய்தார். இது ஒருபுறம் இருக்க முதல் மனைவியான அமிர்தா சுரேஷ், நடிகர் பாலா மீது கொச்சி போலீசில் ஒரு புகார் தந்துள்ளார்.
அந்த புகாரில், "பாலாவுடனான விவாகரத்து வழக்கில் இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதில் 5வது பக்கத்தை அவர் போலியாக தயாரித்துள்ளார். மகளின் பெயரில் எடுக்கப்பட்ட இன்சூரன்சில் அவர் முறைகேடு செய்துள்ளார்.
இன்சூரன்ஸ் - டெபாசிட் - பிரீமியம் தொகை
ஆனால், பிரீமியம் தொகையை அவர் கட்டவில்லை. இன்சூரன்சுக்கான தொகையை திரும்ப எடுத்துக் கொண்டார். வங்கியில் மகளின் பெயரில் டெபாசிட் செய்த ரூ.15 லட்சத்தையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டார். போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளார். எனவே பாலா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அமிர்தா சுரேஷ் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரையடுத்து, நடிகர் பாலா மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அதுகுறித்து விசாரிக்கப்பட்டது.. ஆனால் வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பாலா தெரிவித்துள்ளார். எனினும், சமீபத்தில்தான் திருமணமாகியிருக்கும் நிலையில், இப்படியொரு புகார் கிளம்பி, பாலாவுக்கு சிக்கலை உண்டுபண்ணி வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications