பிக்பாஸ் விதியை மீறிய அபிஷேக், பிரியங்கா, நிரூப்...சிறை காத்திருக்கிறதா?....குறும்படம் உண்டா?
சென்னை: எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்களோ அதையே இப்போ பிரியங்காவும் அபிஷேக்கும் மற்றும் நிரூப் செய்திருக்கிறார்கள்.
இவர்கள் கேங் சேர்ந்த பிறகு வேற மாதிரி மாறி விட்டார்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
போன வாரமே ரகசியம் பேசி தப்பித்து விட்டார்கள் இந்த வாரமாவது இதை கமல் கவனிப்பாரா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

பெருகும் ரசிகர்களின் ஆதரவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. ரசிகர்களின் பேராதரவினால் தான் ஒவ்வொரு சீசனிலும் அதிகமான அளவில் வெற்றி பெற்று வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது 4 சீசன்கள் முடிவடைந்து ஐந்தாவது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. இதற்கு முன்பு சீசன்களில் நிகழ்ச்சி தொடங்கிய அடுத்த நாளிலிருந்தே பிரச்சனைகள் ஒவ்வொன்றாக வெடிக்க தொடங்கி விடும் ஆனால் தற்போது 4 சீசன்களையும் நன்றாக பார்த்துவிட்டு போட்டியாளர்கள் திறமையானவர்களாக தான் இந்த சீசனில் அடிஎடுத்து வைத்திருக்கின்றனர்.

ஒரிஜினல் முகம் வெளிவருமா
இந்த சீசனில் இதில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வருகின்றனர். இதுவரைக்கும் ஒற்றுமையாக இருந்த போட்டியாளர்கள் தற்போது பல கேங்க்களாக செயல்பட்டு வருகிறார்கள் என்று அவர்களுக்குள்ளே சில மனக்கசப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல் சகஜமாக இருப்பது போல தான் ஒரு சில நேரங்களில் நடித்து வருகின்றனர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்ன தான் இவர்கள் நடித்தாலும் ஒரு சில நேரங்களில் அவர்களுடைய ஒரிஜினல் கேரக்டர் வெளியே வந்துவிடுகிறது. அப்படித்தான் தற்போதும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது.

ரகசியத்தை உடைத்து விட்டார்களே
அந்த மாதிரி தான் தற்போது இந்த சீசனில் பிரியங்கா, அபிஷேக், நிரூப், அண்ணாச்சி, ராஜூ இவர்கள் அனைவரும் ஒரு குரூப்பாக இருக்கிறார்கள் என்று சக போட்டியாளர்கள் இவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் இவர்கள் செய்த செயல்தான் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. காரணம் இந்த நிகழ்ச்சியில் யாரும், யாரை எலிமினேஷன் செய்கிறார்கள் என்ற ரகசியத்தை வெளியே சொல்லக் கூடாது ஆனால் இவர்கள் தாங்கள் யாரை எலிமினேஷன் செய்தார்களோ அவர்கள் பெயரை மாற்றி மாற்றி கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்ததும் நெட்டிசன்கள் வழக்கம்போல இது என்ன புது கதையா இருக்கு என்று கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

தண்டனை இருக்கிறதா
அதுவும் அபிஷேக் ராஜூவிடம் நீ யாரை எலிமினேஷன் செய்தாய் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு நான் சொல்ல மாட்டேன் என்று சொல்லும்போது செல்லமாக சண்டை போடுவது போல சண்டை போட்டு என் கிட்ட சொல்ல மாட்டியா என்று கேட்டுக்கண்டிருக்கிறார். இது ரசிகர்களுக்கு கோபமாக தான் வருகிறது. ஆனால் ராஜு, சொல்லக்கூடாது இதுதான் ரூல்ஸ் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் அவரை கலாய்த்து கொண்டிருக்கிறார் அபிஷேக். அப்போ இந்த வாரம் இதற்கு தண்டனை கமல் கொடுப்பாரா?? இல்லையா?? என்று கமெண்டுகளில் பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் சிறை இல்லை...இருந்தால் இவருக்கு சிறை கொடுப்பாரா?? அல்லது என்ன தண்டனை கொடுப்பார்கள்?? என்று கேட்டு வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications