அபிஷேக்கை பார்த்து வெளிப்படையாக பேசிய அண்ணாச்சி... இது பிடிக்கவில்லை என பொங்கும் சிபி
சென்னை: ரசிகர்களின் மனதில் இருப்பதை தற்போது அண்ணாச்சி வெளிப்படையாக பேசி விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுநாள் வரையிலும் இல்லாமல் திடீரென சிபி, அபிஷேக் பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
அபிஷேக்கின் முகத்துக்கு நேராகவே அவருடைய கேரக்டரை பற்றி விமர்சித்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நிகழ்ச்சி சூடு பிடிச்சிருக்கு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக கலக்கி வருகிறது. இந்த வார தலைவராக சிபி பொறுப்பேற்றிருக்கும் நேரத்தில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் தான் இருந்து கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் காயின் எடுக்கும் டாஸ்க் இருப்பதால் போட்டியாளர்களுக்குள் சந்தேகங்களும் மோதலும் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் ஏற்படத் தொடங்கி இருக்கிறது. இதை பார்க்கும்போது ரசிகர்கள் ஒருவழியாக இப்போதான் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

தினமும் ப்ரமோவில் அபிஷேக்
ரசிகர்கள் என்னதான் அபிஷேக் ராஜாவை திட்டி தீர்த்தாலும் அவர் செய்யும் செயல்கள் தான் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யத்தை கூட்டிக் கொண்டு இருக்கிறது என்று ஒரு பக்கமாக அவருக்கு ஆதரவு கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருக்கும் சக போட்டியாளர்களும் அவர் மீது காண்டாக இருக்கும் நேரத்தில் அவருக்கு ஆதரவு கொடுக்கும் போட்டியாளர்களும் இருக்கின்றனர், என்பதை இன்றைய ப்ரமோ காட்டியிருக்கிறது. ஒவ்வொரு ப்ரோமோ வெளியாகும் போதும் அதில் அபிஷேக் தெளிவாக பதிந்துவிடுகிறது. அபிஷேக் தன்னுடைய இருப்பை அந்த வீட்டில் அழுத்தமாக பதிவிட்டு வருகிறார். அதனாலேயே தினமும் ப்ரமோவில் இவரைப் பார்த்ததும் சில ரசிகர்கள் இவர் மீது கடுப்பில் நெகட்டிவ் களையும் அனுப்பி வருகின்றனர்.

கூட்டுக்குடும்பம் என்னாச்சி??
இந்த சீசனில் முதல் வாரம் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் விட்டுக் கொடுத்துக் கொண்டு கூட்டுக் குடும்பம் போல வாழ்ந்து கொண்டு இருந்ததை பார்த்ததும், ரசிகர்கள் அப்போ இந்த சீசன் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து விட்டார்கள் போல. ஆனால், இரண்டு வாரங்களில் அனைவரின் சுயரூபம் தெரிந்து விடும் என்று ஏற்கனவே அண்ணாச்சி கூறியிருப்பது தற்போது நடந்து வருகிறது. அதனால் இமான் அண்ணாச்சியின் ரசிகர்கள் ஒரு பக்கம் அன்றே கணித்தார் என்று இவருடைய புராணத்தை பாடி வருகின்றனர்.

பிரியங்காவுக்கு அறிவுரை
ஆரம்பத்தில் பிரியங்கா, அபிஷேக், அண்ணாச்சி, ராஜு, நிரூப் என அனைவரும் ஒரு அணியாக தான் இருந்தது போல இருந்து வந்தனர். ஆனால் தற்போது இவர்களுக்குள் ஏற்படும் சின்னச்சின்ன கருத்து வேறுபாடு காரணமாக அனைவரும் தனித்தனியே விளையாட்டை தொடங்கியிருக்கின்றனர். இதில் அபிஷேக் மற்றும் பிரியங்கா ஒன்றாக விளையாடிக் கொண்டிருப்பது சக போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. அபிஷேக்கை பற்றி பிரியங்காவிடம் அடிக்கடி எடுத்து கூறி வருகின்றனர். ஆனால் நேற்றைய ப்ரமோகளில் சக போட்டியாளர்கள் சொல்வது சரிதான் என்பது போல தலையை ஆட்டிக் கொண்டிருந்த பிரியங்கா நிகழ்ச்சியில் அப்படி எதுவும் செய்யவில்லை.

கருத்து கணிப்பு சரியா
இன்றைய முதல் ப்ரமோவில் இந்த வீட்டிற்குள் இருக்கும் நெருப்பை பற்றி போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை கூறிக் கொண்டிருக்கின்றனர். அதில் அண்ணாச்சி அபிஷேக்கை பார்த்து அபிஷேக் மீது எனக்குள்ள ஒரு குறை இருக்கிறது, கொளுத்தி போடுவார்கள் என்பார்களா?? அந்த மாதிரி இவர் இருப்பாரோ என்று எனக்கு தோன்றுகிறது என தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதற்கு அபிஷேக்கும் மௌனமாக தலையை ஆட்டிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த கருத்தை கேட்ட சிபி நீங்க அபிஷேக்கை பற்றி சொன்னது தவறாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் ரசிகர்கள் அண்ணாச்சியின் கருத்துக்கு ஆதரவளித்து அவருக்கு ஆதரவாக கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications