அபிஷேக்கை பார்த்து வெளிப்படையாக பேசிய அண்ணாச்சி... இது பிடிக்கவில்லை என பொங்கும் சிபி
சென்னை: ரசிகர்களின் மனதில் இருப்பதை தற்போது அண்ணாச்சி வெளிப்படையாக பேசி விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுநாள் வரையிலும் இல்லாமல் திடீரென சிபி, அபிஷேக் பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
அபிஷேக்கின் முகத்துக்கு நேராகவே அவருடைய கேரக்டரை பற்றி விமர்சித்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நிகழ்ச்சி சூடு பிடிச்சிருக்கு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக கலக்கி வருகிறது. இந்த வார தலைவராக சிபி பொறுப்பேற்றிருக்கும் நேரத்தில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் தான் இருந்து கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் காயின் எடுக்கும் டாஸ்க் இருப்பதால் போட்டியாளர்களுக்குள் சந்தேகங்களும் மோதலும் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் ஏற்படத் தொடங்கி இருக்கிறது. இதை பார்க்கும்போது ரசிகர்கள் ஒருவழியாக இப்போதான் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

தினமும் ப்ரமோவில் அபிஷேக்
ரசிகர்கள் என்னதான் அபிஷேக் ராஜாவை திட்டி தீர்த்தாலும் அவர் செய்யும் செயல்கள் தான் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யத்தை கூட்டிக் கொண்டு இருக்கிறது என்று ஒரு பக்கமாக அவருக்கு ஆதரவு கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருக்கும் சக போட்டியாளர்களும் அவர் மீது காண்டாக இருக்கும் நேரத்தில் அவருக்கு ஆதரவு கொடுக்கும் போட்டியாளர்களும் இருக்கின்றனர், என்பதை இன்றைய ப்ரமோ காட்டியிருக்கிறது. ஒவ்வொரு ப்ரோமோ வெளியாகும் போதும் அதில் அபிஷேக் தெளிவாக பதிந்துவிடுகிறது. அபிஷேக் தன்னுடைய இருப்பை அந்த வீட்டில் அழுத்தமாக பதிவிட்டு வருகிறார். அதனாலேயே தினமும் ப்ரமோவில் இவரைப் பார்த்ததும் சில ரசிகர்கள் இவர் மீது கடுப்பில் நெகட்டிவ் களையும் அனுப்பி வருகின்றனர்.

கூட்டுக்குடும்பம் என்னாச்சி??
இந்த சீசனில் முதல் வாரம் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் விட்டுக் கொடுத்துக் கொண்டு கூட்டுக் குடும்பம் போல வாழ்ந்து கொண்டு இருந்ததை பார்த்ததும், ரசிகர்கள் அப்போ இந்த சீசன் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து விட்டார்கள் போல. ஆனால், இரண்டு வாரங்களில் அனைவரின் சுயரூபம் தெரிந்து விடும் என்று ஏற்கனவே அண்ணாச்சி கூறியிருப்பது தற்போது நடந்து வருகிறது. அதனால் இமான் அண்ணாச்சியின் ரசிகர்கள் ஒரு பக்கம் அன்றே கணித்தார் என்று இவருடைய புராணத்தை பாடி வருகின்றனர்.

பிரியங்காவுக்கு அறிவுரை
ஆரம்பத்தில் பிரியங்கா, அபிஷேக், அண்ணாச்சி, ராஜு, நிரூப் என அனைவரும் ஒரு அணியாக தான் இருந்தது போல இருந்து வந்தனர். ஆனால் தற்போது இவர்களுக்குள் ஏற்படும் சின்னச்சின்ன கருத்து வேறுபாடு காரணமாக அனைவரும் தனித்தனியே விளையாட்டை தொடங்கியிருக்கின்றனர். இதில் அபிஷேக் மற்றும் பிரியங்கா ஒன்றாக விளையாடிக் கொண்டிருப்பது சக போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. அபிஷேக்கை பற்றி பிரியங்காவிடம் அடிக்கடி எடுத்து கூறி வருகின்றனர். ஆனால் நேற்றைய ப்ரமோகளில் சக போட்டியாளர்கள் சொல்வது சரிதான் என்பது போல தலையை ஆட்டிக் கொண்டிருந்த பிரியங்கா நிகழ்ச்சியில் அப்படி எதுவும் செய்யவில்லை.

கருத்து கணிப்பு சரியா
இன்றைய முதல் ப்ரமோவில் இந்த வீட்டிற்குள் இருக்கும் நெருப்பை பற்றி போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை கூறிக் கொண்டிருக்கின்றனர். அதில் அண்ணாச்சி அபிஷேக்கை பார்த்து அபிஷேக் மீது எனக்குள்ள ஒரு குறை இருக்கிறது, கொளுத்தி போடுவார்கள் என்பார்களா?? அந்த மாதிரி இவர் இருப்பாரோ என்று எனக்கு தோன்றுகிறது என தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதற்கு அபிஷேக்கும் மௌனமாக தலையை ஆட்டிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த கருத்தை கேட்ட சிபி நீங்க அபிஷேக்கை பற்றி சொன்னது தவறாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் ரசிகர்கள் அண்ணாச்சியின் கருத்துக்கு ஆதரவளித்து அவருக்கு ஆதரவாக கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications