ஆரம்பத்திலே ஜாதக பொருத்தம் சரி இல்லை.. வாழ்க்கை இப்ப ரொம்ப மாறிடிச்சி..மனம் திறந்த கன்னிகா
சென்னை: கன்னிகா ரவி தான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் தன்னுடைய வாழ்க்கை இப்போது இருக்கும் நிலைமையை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சனைகளை தாண்டி நடந்த திருமணத்தால் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை கன்னிகா ரசிகர்களோடு பகிர்ந்துள்ளார்.

மனைவியால் தெரிந்த இன்னொரு முகம்
திரைத்துறையின் பிரபலமான தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கன்னிகா ரவி மற்றும் சினேகன் ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். கவிஞர் சினேகன் என்று சொன்னால் பலருக்கும் தெரிந்திருந்தாலும் பெயரையும் புகழையும் ரசிகர்களின் மத்தியில் அவருடைய முகத்திற்கு அடையாளத்தைக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். சினேகன் எழுதிய பல பாடல்கள் ஹிட்டாகி ரசிகர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் அந்த பாடல் இவர்தான் எழுதியது என்று கூட பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் சினேகனின் மனைவியான கன்னிகா பலருக்கும் தன்னுடைய கணவரின் படைப்புகளை பற்றி தெரியப் படுத்தி வருகிறார்.

ஜாதகமும் செட்டாகவில்லையாமே
ஒரு ஆணின் வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பது போல, ஒரு பெண்ணின் வளர்ச்சிக்குப் பின்னால் ஆண் இருந்தால் அந்த வாழ்க்கை சொர்க்கம் தான் என்று சொல்வார்கள். அந்த மாதிரி தான் தற்போது கன்னிகா மற்றும் சினேகன் தம்பதியினர் இருந்து வருகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே இவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு பல்வேறு பிரச்சனைகளும் இடைஞ்சல்களும் வந்து கொண்டிருந்ததாம். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அவர்களின் வீட்டிலும் முதலில் சம்மதிக்காமல் தான் இருந்து வந்துள்ளனர். அதுபோல இவர்களுடைய ஜாதக பொருத்தம் கொஞ்சம்கூட செட்டாகவில்லையாம்.

இதுகூட தெரியவில்லையாம்
ஜாதகத்தின் மீது இவர்களுக்கு நம்பிக்கை அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் இவர்கள் ஜாதகம் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் அதில் இவர்கள் இருவருக்கும் பொருத்தம் இல்லாததால் ஆரம்பத்தில் கன்னிகா ரொம்பவே அழுது இருக்கிறாராம். ஆனால் அது தான் இவர்கள் இருவருக்குள்ளும் மேலும் அதிகமான காதலை ஏற்படுத்தியதாம். ஜாதகத்தை எப்படியாவது பொய்யாக்க வேண்டும் என்று இவர்கள் இருவரும் விட்டுக் கொடுத்தும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம் வாழ்க்கையை தொடங்கி வருகிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் கிராமத்தில் இருந்து வந்ததால் பலரிடமும் எப்படி பேசவேண்டும் என்று கூட தெரியாமல் தான் கன்னிகா இருந்து வந்துள்ளாராம்.
Recommended Video

நம்பிக்கை அதிகம் தான்
தற்போதைய சூழலில் கன்னிகா மற்றும் சினேகன் இருவருடைய வாழ்க்கையும் அதிகமாக மாறி விட்டதாம். சினேகன் பழையபடி பல பாடல்களை எழுதத் தொடங்கியிருக்கிறார். அப்படி அவர் எழுதும் திரைப்படங்களில் கன்னிகாக்காக வாய்ப்புகளையும் கேட்டு வருகிறாராம். அந்த மாதிரிதான் தற்போது கூட கன்னிகா ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அதற்கு காரணம் என்னுடைய கணவர் சினேகன் தான் என்று உருக்கமாக அவருக்கு நன்றி கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னைப் பற்றியும் இந்தத் துறையைப் பற்றியும் நன்று தெரிந்ததால் அவர் நல்ல ஒரு முடிவைத்தான் எடுப்பார் என்று கன்னிகா நம்பிக்கொண்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications