For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாண்டியன் ஸ்டோரில் இப்படி ஒரு சொதப்பலா? இப்படியா ரசிகர்களை ஏமாற்றுவாங்க? கலாய்க்கும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ப்ரோமோவை நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் மெஸ்ஸில் சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி ஓட்டலை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூடிவிட்டு சென்று விடுகின்றனர்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ப்ரோமோவில் நெட்டிசன்கள் சில சொதப்பல்களை சுட்டிக்காட்டி கலாய்த்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் ஹோட்டலில் தங்கள் கடையில் உள்ள பார்சலுக்கும் மற்ற பார்சலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்

பகையை மறந்து உறவு கொண்டாட்டம்.. என்னென்ன கதை சொல்றாங்க! விக்ரமன், அசீமிற்கு கிடைத்த பாராட்டுபகையை மறந்து உறவு கொண்டாட்டம்.. என்னென்ன கதை சொல்றாங்க! விக்ரமன், அசீமிற்கு கிடைத்த பாராட்டு

புதுசு புதுசான பிரச்சனை

புதுசு புதுசான பிரச்சனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் அடுத்தடுத்து ட்விஸ்ட் என்கிற பெயரில் பல்வேறு க்ரன்ஜ் செய்து வருவதாக நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர். ஒரு பக்கம் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் அடுத்தடுத்து பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்குள் பிரச்சனைகள் மட்டுமே புதியது புதியதாக வந்த வண்ணமாக இருக்கிறது என்று பலர் அழுத்து கூறி வருகிறார்கள்.

முடிவடையாத பிரச்சனைகள்

முடிவடையாத பிரச்சனைகள்

ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர் வீட்டை மீனாவின் அப்பா எழுதி வாங்கிக்கொண்டு மொத்த குடும்பத்தையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருந்தார். ஏற்கனவே கதிர் முல்லையின் மருத்துவ செலவிற்கு பணம் செலவாவதை குறித்து குடும்பத்திற்குள் பிரச்சனை வந்த நிலையில் கதிர் குடும்பத்தை விட்டு வெளியேறி இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய பங்கு பணத்தை வீட்டிற்குள் கொடுத்து விட்டு ஒன்றாக சேர்ந்து வாழலாம் என இருந்த நிலையில் குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். பிறகு மீண்டும் கதிர் வாழ்ந்த பழைய வீட்டிற்கு மொத்த குடும்பமும் வந்து தங்கியது. இதுவரைக்கும் கதிர் தன்னுடைய ஹோட்டலை சிறப்பாக வளர்த்து வெற்றியும் பெற்ற நிலையில் மீண்டும் கதிரை பழைய சூப்பர் மார்க்கெட்டுக்கு மூர்த்தி கூட்டிக்கொண்டு சென்று விட்டார்.

சூப்பர் மார்க்கெட்டுக்கு ஆப்பு

சூப்பர் மார்க்கெட்டுக்கு ஆப்பு

மீண்டும் அனைவரும் ஒன்றாக சூப்பர் மார்க்கெட்டில் வேலையை தொடங்கிய நேரத்தில் சூப்பர் மார்க்கெட் விவசாய இடத்தில் இருப்பதாகவும் அதனால் இங்கு கமர்சியல் பில்டிங் கட்டக்கூடாது என்று அதை சீல் வைத்து மூடிவிட்டனர். அதைத்தொடர்ந்து மீண்டும் அனைத்து பொருட்களையும் அங்கிருந்து டெம்போவில் ஏற்றிக்கொண்டு பழைய கடைக்கு வந்து தங்களுடைய வியாபாரத்தை தொடங்கினர். கதிர் உடைய ஹோட்டலை வீட்டுப் பெண்கள் நிர்வகிக்க தொடங்கினர். ஹோட்டல் வியாபாரம் அமோகமாக இருக்கிறது என்று அந்த ஊரில் ஹோட்டல் வைத்திருக்கும் நபர் ஹோட்டலில் வந்து சண்டையிட்டு சென்ற பிறகு ஒரு நபர் அந்த ஹோட்டலுக்கு வேலைக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். அவர் இந்த ஹோட்டலில் பெயரை எப்படியாவது கெடுத்து விட வேண்டும் என்று வேலை செய்து கொண்டிருக்கிறார்.

இதைக் கூட கவனிக்கவில்லையா

இதைக் கூட கவனிக்கவில்லையா

இந்த நிலையில் தற்போது ஹோட்டலில் பிரியாணி பார்சல் ஒரு நபர் கேட்க அவருக்கு ஐஸ்வர்யா பார்சல் கட்டி கொடுக்கிறார். ஐஸ்வர்யா கட்டி கொடுக்கும் பார்சலில் வாழை இலை வைத்து கீழே சாதாரண பேப்பர் வைக்கப்படுகிறது ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த நபர் திரும்பி வந்து உங்கள் ஹோட்டல் சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருந்தது என்று ஒரு பார்சலை திரும்ப கொண்டு வந்து அனைவரும் முன்னிலையும் காட்டுகிறார். ஆனால் அந்த பார்சலில் வாழை இலை வைத்து கீழே சில்வர் பேப்பர் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதை கவனிக்காத சீரியல் தரப்பினர் இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் வந்து அங்கே செக் செய்து பார்த்து விட்டு ஓட்டலை மூடிவிட்டு சென்று விடுகிறார்கள். ஆனால் இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் சீரியலை கலாய்த்து வருகிறார்கள். என்ன தான் பிரச்சனை புதுசு புதுசாக வந்து கொண்டிருந்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா? இதை பார்க்கும் எங்களுக்கே தெரிகிறது ஆனால் கடையில் இருப்பவர்களுக்கு இது நம்முடைய பார்சல் இல்லை என்று தெரியாதா என்று கேள்வி எழுப்பி கலாய்க்கிறார்கள்.

English summary
Netizens are currently raving about the promo of Pandyan Store serial which is being aired on Vijay TV. The food safety officials have closed down the restaurant saying that there was a cockroach in the food in Pandyan Store mess. In this situation, the netizens are pointing out some bugs in the promo of Pandyan Store serial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X