பட்டுச்சேலை சரசரக்க... பார்வையாலே சுண்டி இழுக்கும் பிரியங்கா நல்கரி
சென்னை: எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேரழகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சன் டிவியின் ரோஜா.
மாடர்ன் உடையிலும் சரி, புடவையிலும் சரி, எப்படி பார்த்தாலும் கலக்குறாரே என ரசிகர்களின் மனது ஏங்கி போய் இருக்கிறதாம்.
விதவிதமாக போஸ் பார்த்ததும் ரசிகர்களின் ஹார்ட்டின்கள் இன்ஸ்டாகிராமில் ஆக்கிரமித்து வருகிறது.

சன் டிவியின் ரோஜா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் தெரியாதவர்களே இருக்க முடியாது. சின்ன திரை ரசிகர்களின் பேவரைட் சீரியல்களில் இந்த சீரியல் இருந்துவருகிறது. சீரியலை ரசிக்கும் ரசிகர்களை விடவும் சீரியலின் கதாநாயகியை ரசிக்கும் ரசிகர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். பொதுவாக சீரியல் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும் தான் தொடர்ந்து பார்த்து வருவர் ஆனால் இந்த சீரியலை பொருத்தவரையில் இளைஞர்கள் முதல் வீட்டில் இருக்கும் பெண்கள் வரை பலரும் பார்த்து வருகின்றனர்.

முதல் சீரியலில் வெற்றி
சன் டிவியின் டிஆர்பி க்கு இந்த சீரியல் முதன்மையாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் சிரித்த முகமாகவும், கம்பீரமான கெட்டப்பிலும், பார்த்ததும் டக்கென்று மனதிற்கு பிடித்து விடும் அழகில் இருக்கும் அந்த சீரியலின் கதாநாயகி தான். அவருடைய பெயர் ப்ரியங்கா நல்கரி என்பதே பலருக்கும் தெரியாது. அவரை ரோஜா என்றுதான் அனைவரும் அழைத்து வருகின்றனர். சின்னத்திரையின் ரோஜாவாகவும், சமூக வலைத்தளத்தில் கலக்கும் கலக்கல் பிரியங்கா நல்கரியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்காகவே பல இளைஞர்களும் இந்த சீரியலை பார்த்து வருகிறார்களாம்.

எதிர்பார்க்காத ரசிகர்களின் அன்பு
தமிழில் முதன்முதலில் அறிமுகமான சீரியலில் இந்த அளவிற்கு பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் ஆவார் என்று அவருடைய ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை. அது மட்டுமல்லாமல் அவரும் இதனை எதிர்பார்க்கவில்லை. முதலில் தமிழ் சீரியலில் நடிப்பதற்கு ரொம்பவே பயப்பட்டுருக்கிறார். தமிழே தெரியாமல் எப்படி தமிழ் சீரியலில் நடிப்பது என்று நினைத்த இவர்தான் இப்போது, தமிழில் பேசியே தமிழ் இளைஞர்களை கவர்ந்து விட்டார். பொதுவாக நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இதில் இவரும் ஒருவர்.

உயிருள்ள சிலையா? ?
சீரியலில் மட்டுமல்லாமல் போட்டோசூட்டிலும் பிஸியாக இருக்கிறார். சூட்டிங் ஸ்பாட்டில் தொடங்கி கிடைக்கும் கேப்பில் எல்லாம் அங்கே இங்கே நின்றபடி இவர் எடுக்கும் போட்டோஸ்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடும். அந்த மாதிரிதான் தற்போதும் கூட பட்டுபுடவையில் பலருடைய மனதையும் பறித்து விட்டார். கல் சுவற்றின் அருகில் உயிருள்ள சிலையாக இவர் நிற்பதைப் பார்த்ததும் பலர் சொக்கிப்போய் இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications