அழகான மஞ்சப் புறா.. அதன் கூட நீல புறா.. ராதிகாவும், சரத்குமாரும்... அள்ளுதே!
சென்னை: ராதிகா அழகு என்றால்.. அவருடைய பேத்தி அவரை விட ரொம்ப அவழகுதான். இப்போது ராதிகா தனது பேத்தியை மடியில் வைத்து முகம் மலர புன்னகையுடன் இருக்கும் புகைப்படம் பேசுபொருளாகி யுள்ளது.
நடிகை ராதிகாவின் மகள் ரயான். எல்லோரும் அறிந்ததுதான். அவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் திருமணமானது. இருவரும் சந்தோஷ தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு முதலில் பையன் பிறந்தான். பிறகு மகள் பிறந்தாள். மார்ச் மாதம் மகள் பிறந்தாள்.
தனது தாயாருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக தனது மகளுக்கு ராதியா மிதுன் என்று பெயரிட்டுள்ளார் ரயான். இந்த நிலையில் ராதிகா தனது பேத்தியை கையில் தூக்கியபடி காட்சி தரும் ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் டிபியாக மாற்றியுள்ளார்.
சில்லுன்னு ஒரு காதல் கதை.. அந்த குட்டி பாப்பா இப்ப வக்கீல் தெரியுமா!
ராதிகாவின் பெருமிதம்
வாய் நிறைய புன்னகை.. கண்களில் பெருமிதம்.. கையில் பேத்தி என கலக்கலாக காட்சி தருகிறார் ராதிகா. கூடவே ராதிகாவின் கணவர் சரத்குமாரும் பெருமிதத்துடன் தனது மனைவி மற்றும் பேத்தியைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். பார்க்கவே படு சூப்பராக இருக்கிறது இந்த புகைப்படம். இப்படம்தான் இப்போது பரவி வருகிறது
சின்னத்திரையில் சித்தி
நடிகையாக வெற்றிகரமாக பெரிய திரையில் வலம் வந்தவர் ராதிகா. பின்னர் சின்னத் திரைக்கு வந்தார். அவர் தயாரித்து,நடித்த அத்தனை சீரியல்களுமே மக்கள் மத்தியில் பிரபலமாகின. குறிப்பாக சித்தி சீரியல். அதன் வெற்றி இமாலய வெற்றியாகும். இன்று வரை சித்தி வெற்றியை யாராலுமே முறியடிக்க முடியவில்லை. ராதிகாவுக்கே சித்தி என்ற செல்லப் பெயர் வந்து ஒட்டிக் கொண்டது.
சித்தி 2ம் பாகம்
சில மாதங்களுக்கு முன்புதான் சித்தி 2ம் பாகத்தை அறிமுகப்படுத்தினார் ராதிகா. அதுவும் சிறப்பாக ஓடி வந்தது. இந்த நிலையில்தான் கொரோனா குறுக்கிட்டு காரியத்தைக் கெடுத்து விட்டது. இப்போது சீரியல்கள் இல்லை. இந்த நிலையில் தனது குடும்ப உறுப்பினர்களோடு நிறைய செலவு செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது ராதிகாவுக்கு. அதை வைத்து அவ்வப்போது ஏதாவது போட்டோ, வீடியோ போட்டு வருகிறார் ராதிகா.
Recommended Video
மடியில் பேத்தியுடன் ராதிகா
அந்த வகையில்தான் தற்போது தனது பேத்தியைத் தூக்கி கொஞ்சியபடி காட்சி தந்துள்ளார் ராதிகா. கூடவே கணவரும். இந்த புகைப்படம் பல செய்திகளை சொல்கிறது. ராதிகாவின் மு கத்தில் அத்தனை பெருமை. சந்தோஷம் பூரிப்பு. கணவருக்கோ அதை விட பெருமிதம். மனைவியின் மகிழ்ச்சியைப் பார்த்து அவர் சந்தோஷமடைவது அதை விட சிறப்பு.