பச்சை பசேலென்று மொத்த அழகும்.. சொக்கி விழும் ரசிகர்கள்.. அந்த சிரிப்புதான்!
சென்னை : பச்சைப் பசேல் என பளிச்சென ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார் ரம்யா பாண்டியன்.
மொட்டை மாடி ரம்யாவிலேயே இன்னும் தங்கியிருக்கும் ரசிகர்களை அங்கிருந்து தூக்கி வர ரம்யா என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார்.
லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 543-ல் இருந்து 1,000 ஆக உயர்த்தப்படுகிறதா? பரபர விவாதங்கள்
கவர்ச்சியை விட அழகியல்தான் ரம்யாவிடம் கொட்டிக் கிடக்கிறது. அந்த அழகும், வசீகரமும்தான் ரம்யாவின் பலமும் கூட.
மயக்கும் மாய சிரிப்பு
ரம்யா பாண்டியனுக்கு சிறப்பே அவருடைய சிரிப்பு தான். அதை சிறப்பாக காட்டி நெட்டிசன் களையும் கலங்கடித்து விடுகிறார். இப்படி வந்தா எப்படி இனி கலாய்ப்பிங்கனு நக்கலாக கேட்பதுபோல கால் மேல கால் போட்டு மொத்த அழகையும் காட்டி பார்ப்பவர்கள் வெட்கப்படுகிறார்களே இல்லையோ இவரே வெட்கப்பட்டு சிலிர்க்க வைத்து விடுகிறார்.
நல்ல பசுமை தான்
பச்சை வண்ணம் குளுமை செழுமைனு எல்லாருக்கும் தெரியும் . ஆனா அத இப்போ ரம்யா பாண்டியன் போட்டோ போட்டு காட்டி விட்டாரே. இவ்வளவு செழிப்பா பார்த்ததும் ஜொள்ளு வடிக்கும் ரசிகர்களின் அலும்புதான் தாங்கல. முகத்தை எப்போதும் மூடி வைக்காதே என்று பாடி கலாய்த்ததால் அடுத்த போட்டோவில் கண்ணை மூடி கெத்து காட்டியிருக்கிறார்.
இது போதுமே பார்த்து ரசிக்க
சும்மாவே ரம்யா பாண்டியன் போஸ்ட் எல்லாம் வெறித்தனமாக இன்ஸ்டாகிராமில் வலம் வரும். இவர் சும்மா இருந்தாலும் இவருடைய ரசிகர்கள் இப்போ சும்மா இருப்பதில்லை. ரம்யா பாண்டியனின் போட்டோஸ்களை அதிகமாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள் . இந்தநிலையில் மீண்டும் தன்னுடைய வசீகர புன்னகையை வீசி வலைத்தள மீன்களை கவர்ந்துவிட்டார்.
வெளியே வெயிலு உள்ளே குளுரு
ரம்யா பாண்டியன் என்று சொன்னாலே அவருடைய மொட்டை மாடி போட்டோஸ்கள் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும்.ஆனால் இப்போ மொட்டை மாடியில் அதிகமாக வெயில் இருக்கு அதனால வீட்டுக்குள்ளேயே போட்டோ சூட்டை எடுத்து விடுவோம் என பச்சையாக வந்து வேற லெவல் போட்டோவை எடுத்து குவித்து விட்டார். இந்த போட்டோவை பார்த்ததும் மொட்டைமாடியில் வலம் வந்தது போல இனி பச்சையாகவும் வலம் வருவாரானு தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
அதான் கை வந்த கலை ஆச்சே
போட்டோ சூட்டுக்கு ஒரு சில நாட்கள் விடுமுறை விட்டு இருந்தார் ரம்யா பாண்டியன் . இடையில் மரக் கன்று நடும் பணிகளிலும் தீவிரம் காட்டினார். அதுவும் விவேக் மறைவுக்குப் பிறகு இதில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ரசிகர்களையும் செய்யச் சொல்கிறார். இந்த நிலையில் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் போட்டோஸ்களைப் போட்டு ரசிகர்களையும் கலகலக்க வைத்து கலகலப்பு மூட்டியுள்ளார்.