Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: சத்யாவிடம் முத்து கேட்ட கேள்வி.. கோபப்பட்ட அண்ணாமலை.. விஜயா உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் பத்தாம் தேதிக்கான எபிசோடில் முத்து ஜெயிலிலிருந்து வெளியே வந்திருக்கிறார். ஆனால் முத்து பற்றிய உண்மைகள் ஸ்ருதியின் அம்மா மூலம் அண்ணாமலை குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் பெரிய பிரச்சனையும் வெடிக்கிறது.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவை ஜெயிலில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்பதற்காக என்ன செய்யலாம் என்று மீனா யோசித்துக் கொண்டிருக்கும் போது ஸ்ருதி ஞாபகம் வந்ததால் ஸ்ருதிக்கு போன் போட்டு உதவி கேட்கிறார். ஸ்ருதி தன்னுடைய அப்பா அம்மாவிடம் உதவி கேட்டு அவர்கள் முடியாது என்று சொல்லி விடுகிறார்கள்.

television siragadikka aasai serial vijay tv

ஆனாலும் இந்த விஷயத்தை ஸ்ருதியின் அம்மா விஜயாவிடம் போய் சொல்லி விடுகிறார். பிறகு ஸ்ருதி மீனாவிற்கு ஃபோன் போட்டு நான் எங்க அப்பா அம்மாவிடம் உதவி கேட்டு அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் முத்துவிடம் மீனா போய் நடந்ததை சொல்ல, முத்து நான் தான் ஸ்ருதியின் அப்பாவை அடிச்சிருக்கிறானே அவங்க எப்படி உதவி செய்வாங்க? எப்படியும் நாளைக்கு காலையில் என்னை வெளியே விட்ருவாங்க நீ வீட்டுக்கு போ என்று அனுப்பி வைக்கிறார்.

அதோடு வீட்டில் யாரேனும் கேட்டால் நான் சவாரிக்கு போடுவதாக சொல்லிவிடு என்று முத்து சொல்ல, வீட்டிற்கு வந்த மீனாவிடம் விஜயா எங்க போயிட்டு வர முத்துவை எங்கே என்று அடுக்கடுக்கா கேள்வி கேட்க, மீனா முத்து சொன்னது போல சொல்ல கடைசியில் விஜயா எங்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். ஸ்ருதியின் அம்மா வந்து சொல்லிட்டாங்க என்று சொன்னதும் மீனா அதிர்ச்சியாகி நிற்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதோடு என் மருமக பொய்யே சொல்ல மாட்டா என்று இவளுக்காக சப்போர்ட் பண்ணுவீங்களே இப்போ எத்தனை பொய் சொல்றா பாருங்க என்று அண்ணாமலையிடம் விஜயா ஏத்தி விட அண்ணாமலை கோபப்படுகிறார். உன் குடும்பத்து மேல எங்களுக்கு பாசம் இல்லையா? இந்த விஷயத்தை நீ என்கிட்ட சொல்லி இருந்தா நான் வேற யாரையாவது வச்சு பேசி பார்த்து இருப்போம் ஆனால் நீங்க பிரின்ஸ்பலை ஏமாத்துற மாதிரி இப்படி செஞ்சது தப்பு என்று கோபப்பட்டு கிளம்பி போகிறார்.

இதை பார்த்து விஜயாவும் மனோஜும் சந்தோஷப்படுகின்றனர். இதுவரைக்கும் ஒரு முறை கூட மீனா மீது கோபப்பட்டது கிடையாது. இப்போ மீனா மீது இவர் கோபப்படுவதை பார்க்கும் போதே சந்தோசமாய் இருக்கிறது என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் காலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு மீனா போகும்போது அங்கு சத்யாவும் மீன் சீதாவும் நிற்கின்றனர். அப்போ இங்கு நடந்த விஷயங்கள் எல்லாம் அம்மாவுக்கு தெரியுமா? என்று கேட்க, அவங்களுக்கு தெரியாது என்று சீதா சொல்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

பிறகு உள்ளிருக்கும் இன்ஸ்பெக்டரிடம் மீனா சென்று நடந்த உண்மையை சொல்ல அவர் சரி என்று முத்துவை அனுப்பி வைத்து விடுகிறார். வெளியே வந்ததும் சீதா இப்பதான் சந்தோஷமா இருக்கு இதுவரைக்கும் எங்களுக்காக அக்கா தான் இருந்தாங்க இப்போ நீங்க எங்களுக்காக செஞ்ச உதவி எங்களுக்கு பெருசு என்று எமோஷனலாக பேசுகிறார்.

அதற்கு முத்து நான் என்ன அடுத்த ஆளா? நீங்க என் குடும்பம் தான உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால், நான் பாத்துட்டு இருக்க முடியுமா என்று பேச சத்யா முத்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அதற்கு முத்து நீ படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும் என்பதற்காகத்தான் நான் உனக்காக ஜெயிலுக்கு போயிட்டு வந்தேன். நீ இனி படிப்பில் கவனம் வை என்று அட்வைஸ் கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

television siragadikka aasai serial vijay tv
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+