பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் செய்ததை அதிகமாக காட்டவில்லை..பீல் பண்ணும் இசைவாணி
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் என்னுடைய வேலைகளில் கவனமாகவும், கருத்தாகவும் இருந்தேன். ஆனால் பல விஷயங்களை வெளியே காட்டவில்லை என்று இசைவாணி கூறியிருக்கிறார்.
வெளியே வந்த பிறகு தான் பாடாததை குறித்து பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
உள்ளே அனைவருக்கும் நான் பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் அதெல்லாம் மறைக்கப்பட்டு விட்டது என்று பீல் பண்ணி உள்ளார்.

இப்படியெல்லாம் நடந்ததா??
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு பல ரசிகர்கள் இசை வாணியிடம் வெளியே செல்லும் இடமெல்லாம், நாங்கள் உங்களை ரொம்ப எதிர்பார்த்தோம். ஆனால் நீங்கள் அங்கே எதுவுமே செய்யவில்லையே என்று பீல் பண்ணி கேட்டு வருகிறார்கள். அதை கேட்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் அப்படி எல்லாம் இல்லை எப்போதும் அனைவரிடமும் சகஜமாகவும், ஜாலியாகவும் பழகி கொண்டு இருந்தேன். அதுமட்டுமல்லாமல் யாராவது தனியாக இருந்தால் அவர்களோடு பேசி கலகலப்பாக மாற்றிக் கொண்டுதான் இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.

பாட்டு சொல்லிக் கொடுத்த இசைவாணி
கமல் கூட வார இறுதி நாட்களில் இசை வாணியிடம் உங்களுடைய பாடலை மறந்து விட்டீர்களா??பாடுங்கள் உங்களுடைய திறமையை காட்டுங்கள் என்று இவருக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், இவர் நான் பாடிக் கொண்டுதான் இருந்தேன். பாத்திரங்கள் கழுவும் இடங்களிலும், வீட்டில் அமைதியாக இருக்கும் இடங்களிலும், என்னுடைய பாடல் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. அது மட்டுமல்லாமல் போட்டியாளர்கள் பலருக்கும் பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அதையெல்லாம் வெளியே காட்டவில்லை என்று ஃபீல் பண்ணியிருக்கிறார்.

அப்படிலாம் இருக்க முடியாது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருபத்தி நான்கு மணி நேரமும் எடுக்கும் வீடியோக்களில் ஒரு மணிநேரம் மட்டும் தான் ஒளிபரப்பப்படுகிறது. அதில் என்னை மட்டுமே அதிகமாக காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். மற்ற போட்டியாளர்களின் செயல்களையும், அங்கு சுவாரசியமாக நடைபெறும் நிகழ்வுகளையும் தவறாமல் காட்ட வேண்டும் என்பதற்காக நான் செய்த சின்ன சின்ன செயல்கள் பல நேரங்களில் வெளியே காட்டப்படவில்லை. அதனால் தான் அனைவரும் என்னை தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னால் பாட்டு பாடாமல் இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

ஃபீல் பண்ணும் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு பல ரசிகர்கள் இசை வாணிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இவருடைய வெளியேற்றம் அவர்களை அதிகமாக பாதித்திருக்கிறது. எப்படியும் அதிக நாட்கள் இந்த நிகழ்ச்சியில் இவர் இருப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இவர் 50 நாட்களுக்கு மேலே தாக்குப்பிடித்தாலும், வெளியேறியது கொஞ்சம் வருத்தமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் உள்ளே நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி இவர் வெளியே கூறியிருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நெட்டிசன்கள் இவர் பேசும் வார்த்தைகளுக்கு பங்கமாக கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications