For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் செய்ததை அதிகமாக காட்டவில்லை..பீல் பண்ணும் இசைவாணி

Google Oneindia Tamil News

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் என்னுடைய வேலைகளில் கவனமாகவும், கருத்தாகவும் இருந்தேன். ஆனால் பல விஷயங்களை வெளியே காட்டவில்லை என்று இசைவாணி கூறியிருக்கிறார்.

வெளியே வந்த பிறகு தான் பாடாததை குறித்து பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்.. 3 முக்கியமான அப்டேட்கள்! தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்.. 3 முக்கியமான அப்டேட்கள்!

உள்ளே அனைவருக்கும் நான் பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் அதெல்லாம் மறைக்கப்பட்டு விட்டது என்று பீல் பண்ணி உள்ளார்.

இப்படியெல்லாம் நடந்ததா??

இப்படியெல்லாம் நடந்ததா??

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு பல ரசிகர்கள் இசை வாணியிடம் வெளியே செல்லும் இடமெல்லாம், நாங்கள் உங்களை ரொம்ப எதிர்பார்த்தோம். ஆனால் நீங்கள் அங்கே எதுவுமே செய்யவில்லையே என்று பீல் பண்ணி கேட்டு வருகிறார்கள். அதை கேட்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் அப்படி எல்லாம் இல்லை எப்போதும் அனைவரிடமும் சகஜமாகவும், ஜாலியாகவும் பழகி கொண்டு இருந்தேன். அதுமட்டுமல்லாமல் யாராவது தனியாக இருந்தால் அவர்களோடு பேசி கலகலப்பாக மாற்றிக் கொண்டுதான் இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.

பாட்டு சொல்லிக் கொடுத்த இசைவாணி

பாட்டு சொல்லிக் கொடுத்த இசைவாணி

கமல் கூட வார இறுதி நாட்களில் இசை வாணியிடம் உங்களுடைய பாடலை மறந்து விட்டீர்களா??பாடுங்கள் உங்களுடைய திறமையை காட்டுங்கள் என்று இவருக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், இவர் நான் பாடிக் கொண்டுதான் இருந்தேன். பாத்திரங்கள் கழுவும் இடங்களிலும், வீட்டில் அமைதியாக இருக்கும் இடங்களிலும், என்னுடைய பாடல் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. அது மட்டுமல்லாமல் போட்டியாளர்கள் பலருக்கும் பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அதையெல்லாம் வெளியே காட்டவில்லை என்று ஃபீல் பண்ணியிருக்கிறார்.

அப்படிலாம் இருக்க முடியாது

அப்படிலாம் இருக்க முடியாது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருபத்தி நான்கு மணி நேரமும் எடுக்கும் வீடியோக்களில் ஒரு மணிநேரம் மட்டும் தான் ஒளிபரப்பப்படுகிறது. அதில் என்னை மட்டுமே அதிகமாக காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். மற்ற போட்டியாளர்களின் செயல்களையும், அங்கு சுவாரசியமாக நடைபெறும் நிகழ்வுகளையும் தவறாமல் காட்ட வேண்டும் என்பதற்காக நான் செய்த சின்ன சின்ன செயல்கள் பல நேரங்களில் வெளியே காட்டப்படவில்லை. அதனால் தான் அனைவரும் என்னை தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னால் பாட்டு பாடாமல் இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

ஃபீல் பண்ணும் ரசிகர்கள்

ஃபீல் பண்ணும் ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு பல ரசிகர்கள் இசை வாணிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இவருடைய வெளியேற்றம் அவர்களை அதிகமாக பாதித்திருக்கிறது. எப்படியும் அதிக நாட்கள் இந்த நிகழ்ச்சியில் இவர் இருப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இவர் 50 நாட்களுக்கு மேலே தாக்குப்பிடித்தாலும், வெளியேறியது கொஞ்சம் வருத்தமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் உள்ளே நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி இவர் வெளியே கூறியிருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நெட்டிசன்கள் இவர் பேசும் வார்த்தைகளுக்கு பங்கமாக கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
In Bigg Boss, I was careful and opinionated in my work. But many things have not been exposed,said Isaivani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X