இதுதான் டாஸ்க்..அல்லு விடும் போட்டியாளர்கள்!!!..ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சென்னை: மனசை சமன்படுத்தவே முடியல, இதுல எப்படி இந்த டாஸ்க் ல வின் பண்ண போறாங்களோ!!!என ரசிகர்கள் ஆர்வத்தில் புலம்பி வருகின்றனர்.
சர்வைவர் நிகழ்ச்சியில் லேட்டஸ்ட் ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள்.
கடைசில வச்சாங்க பாருங்க செக்!!!!என்று ஆர்ப்பரிக்கும் ரசிகர்களின் கூட்டம் சமூக வலைதளத்தை அலறவிடுகிறது.

இன்னைக்கு சம்பவம் இருக்கு
சர்வைவர் நிகழ்ச்சியில் முதல் ப்ரோமோவை பார்த்ததும், இன்னைக்கு வேற லெவல் என்டர்டைன்மென்ட் இருக்கு...என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்படி என்னதான் இந்த முதல் ப்ரோமோவில் இருக்கிறது என்று பார்த்தால்...எலிமினேஷன்!!! அதுவும் இறுதியான எலிமினேஷன்!!!யார் இந்த நிகழ்ச்சியிலிருந்து முழுமையாக வெளியேற போகிறார்கள்?' என்று போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், ரசிகர்களும் ரொம்பவே ஆர்வத்தில் இருக்கின்றனர். அதுவும் போட்டியாளர்களுக்குள்ளே.. 'ஈகோ' தலையெடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த மாதிரி போட்டிகள் கொஞ்சம் வெறியை ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இது வேற ரகம்
'சர்வைவர்'நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கடந்த நிலையில்,ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பு கூடிக் கொண்டுதான் இருக்கிறது.இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு..நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில், நிகழ்ச்சி தொடங்கியது பிறகும் ரசிகர்களின் மத்தியில் ஜொலித்துக் கொண்டுதான் இருக்கிறது... இந்த நிகழ்ச்சி வேற எந்த நிகழ்ச்சியைப் போன்றும் இல்லாததால்,இதற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டனர். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு வரைக்கும், அதிகமான ரசிகர்கள் இது பிக்பாஸ் போன்ற இருக்கும் என்று கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் நிகழ்ச்சியில் முதல் நாள் எபிசோடை பார்த்ததும் இது அந்த மாதிரி நிகழ்ச்சி இல்லை என்று அனைவரும் புரிந்து கொண்டனர்.

டாஸ்க் எல்லாம் வெறித்தனம்
காட்டுக்குள்ளே!! அதுவும் கடற்கரையில்!! இவர்கள் செய்யும் டாஸ்க் எல்லாம் வெறித்தனமாகவும், வேகமாகவும் தான் இருந்து வருகிறது. ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்களின் வேகத்தையும் விவேகத்தையும் பிரதிபலிக்கிறது. யாருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல!! என்று தங்களுடைய திறமைகளை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். உடல் வலிமையில் மட்டுமல்லாமல், மன வலிமையிலும் இவர்களின் போராட்டம் இருந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில நேரங்களில் இவர்களுக்குள்ளும் பிரச்சனைகள் தலைதூக்கி ஆடிக் கொண்டிருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், சிலநேரங்களில் இந்த நிகழ்ச்சியும் பிக்பாஸ் போன்றுதான் இருக்கிறது.. என்ன அவர்கள் வீட்டுக்குள்ளே சண்டை போடுவார்கள்', இங்கே காட்டுக்குள்ளே சண்டை போடுகிறார்கள்... என்று கூறி வருகின்றனர்.

விவேகம் முக்கியம் பிகிலு
முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது.. என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ரசிகர்களின் எண்ணத்தை பொய்யாக்கி முதல் வாரத்திலேயே இரண்டு போட்டியாளர்களை எலிமினேஷன் செய்து பெரும் பரபரப்பு ஆக்கிவிட்டனர்.ஆனால் அவர்கள் இருவரையும் மூன்றாவது உலகத்தில் தரையிறக்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துவிட்டார்கள். தற்போது எலிமினேஷன் ஆகி மூன்றாவது உலகத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு என்று தனி போட்டி வைத்திருக்கின்றனர். அதுவும் ஸ்ருஷ்டி டாங்கே, மற்றும் காயத்ரி, இவர்கள் இருவரும் உடல் வலிமையில் மட்டுமல்லாமல், மனவலிமையும் நிரூபிக்கும் விதமாக இவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. பஸ்ஸில்ஸ்(puzzles) டவர் கட்டுவதில்' வேகத்தைவிட விவேகம் தான் முக்கியம்' என்பதை யார்? நிரூபிக்க போகிறார்கள். என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கடைசியாக அர்ஜுன் பேசிய அந்த ஒரு வசனம்தான் ஹைலைட்டே!!! '.. இந்த கேமில் தோற்றவர்கள் கண்டிப்பாக நிகழ்ச்சியை விட்டு முழுமையாக வெளியேறுபவர்கள்' என்று கூறியிருக்கிறார்.இதனை கேள்விப்பட்டதுமே இன்று இரவு தரமான சம்பவம்!! இருக்கிறது, என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications