3 ஆண்டுகளில் அரபிக் கடலில் 10, வங்கக் கடலில் 10.. கேரளாவை தாக்கிய 20 புயல்கள்.. காரணம் என்ன?
திருவனந்தபுரம்: அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கேரள மாநிலம் மீது அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 3 ஆண்டுகளில் 20 புயல்கள் அந்த மாநிலத்தை பதம்பார்த்துள்ளது.
Recommended Video
வங்கக் கடல், அரபிக் கடல் ஆகிய இடங்களில் உருவாகும் புயல்கள் தாக்கும் இடங்களில் கேரளாவும் ஒன்று. இந்த புயல்கள் தாக்குவது இல்லாமல் தென்மேற்கு பருவமழையால் கேரளா மாநிலம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
பொதுவாக அரபிக் கடலில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு புயல்கள் உருவாகி கேரளாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவை வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. சுமாரான பாதிப்பையே ஏற்படுத்திவிட்டு செல்லும்.

வீரியம்
ஆனால் அண்மைகாலங்களில் இந்த புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அத்துடன் அதன் வீரியமும் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் சாலைகள், வீடுகள், பொது சொத்துகள் சேதமடைவதும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

புயல்கள்
கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் கேரளாவை 20 புயல்கள் தாக்கியது என்றால் பார்த்து கொள்ளுங்கள். அதாவது அரபிக் கடலில் உருவான 10 புயல்கள், வங்கக் கடலில் உருவான 10 புயல்கள் என மொத்தம் 20 புயல்கள் கேரளாவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

எத்தனை புயல்கள்
வங்கக் கடலில் 2018ஆம் ஆண்டு தயே, திட்லி, கஜா, பேதெய், ஆகிய புயல்களும், 2019-ஆம் ஆண்டு பாபுக், ஃபனி, புல்புல் ஆகிய புயல்களும் 2020ஆம் ஆண்டு ஆம்பன், நிவர், புரேவி ஆகிய புயல்களும் தாக்கின. அது போல் அரபிக் கடலை எடுத்துக் கொண்டால் 2018ஆம் ஆண்டு சாகர், மேக்குனு, லிபன் ஆகிய புயல்கள் கேரளத்தை தாக்கின.

என்னென்ன புயல்கள்
அது போல் 2019ஆம் ஆண்டு வாயு, ஹிக்கா, கியார், மகா, பவன் ஆகிய புயல்களும் 2020ஆம் ஆண்டு நிசர்கா, கடி ஆகிய புயல்களும் கேரளாவுக்கு பாதிப்பை கொடுத்துள்ளன. இவற்றில் தீவிர புயல்களாக ஆம்பன், கியார் ஆகியவை இருந்தன. இந்த புயல்களால் மணிக்கு 222 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

தீவிர புயல்
அது போல் மேக்னு, ஃபனி, மகா ஆகிய புயல்களின் போது மணிக்கு 160 முதல் 222 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இது போல் புயல்களின் அதிகரிப்பு ஏன் என்று பார்த்தால், பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலால் கடலில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி புயல்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications