3 ஆண்டுகளில் அரபிக் கடலில் 10, வங்கக் கடலில் 10.. கேரளாவை தாக்கிய 20 புயல்கள்.. காரணம் என்ன?
திருவனந்தபுரம்: அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கேரள மாநிலம் மீது அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 3 ஆண்டுகளில் 20 புயல்கள் அந்த மாநிலத்தை பதம்பார்த்துள்ளது.
Recommended Video
வங்கக் கடல், அரபிக் கடல் ஆகிய இடங்களில் உருவாகும் புயல்கள் தாக்கும் இடங்களில் கேரளாவும் ஒன்று. இந்த புயல்கள் தாக்குவது இல்லாமல் தென்மேற்கு பருவமழையால் கேரளா மாநிலம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
பொதுவாக அரபிக் கடலில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு புயல்கள் உருவாகி கேரளாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவை வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. சுமாரான பாதிப்பையே ஏற்படுத்திவிட்டு செல்லும்.

வீரியம்
ஆனால் அண்மைகாலங்களில் இந்த புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அத்துடன் அதன் வீரியமும் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் சாலைகள், வீடுகள், பொது சொத்துகள் சேதமடைவதும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

புயல்கள்
கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் கேரளாவை 20 புயல்கள் தாக்கியது என்றால் பார்த்து கொள்ளுங்கள். அதாவது அரபிக் கடலில் உருவான 10 புயல்கள், வங்கக் கடலில் உருவான 10 புயல்கள் என மொத்தம் 20 புயல்கள் கேரளாவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

எத்தனை புயல்கள்
வங்கக் கடலில் 2018ஆம் ஆண்டு தயே, திட்லி, கஜா, பேதெய், ஆகிய புயல்களும், 2019-ஆம் ஆண்டு பாபுக், ஃபனி, புல்புல் ஆகிய புயல்களும் 2020ஆம் ஆண்டு ஆம்பன், நிவர், புரேவி ஆகிய புயல்களும் தாக்கின. அது போல் அரபிக் கடலை எடுத்துக் கொண்டால் 2018ஆம் ஆண்டு சாகர், மேக்குனு, லிபன் ஆகிய புயல்கள் கேரளத்தை தாக்கின.

என்னென்ன புயல்கள்
அது போல் 2019ஆம் ஆண்டு வாயு, ஹிக்கா, கியார், மகா, பவன் ஆகிய புயல்களும் 2020ஆம் ஆண்டு நிசர்கா, கடி ஆகிய புயல்களும் கேரளாவுக்கு பாதிப்பை கொடுத்துள்ளன. இவற்றில் தீவிர புயல்களாக ஆம்பன், கியார் ஆகியவை இருந்தன. இந்த புயல்களால் மணிக்கு 222 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

தீவிர புயல்
அது போல் மேக்னு, ஃபனி, மகா ஆகிய புயல்களின் போது மணிக்கு 160 முதல் 222 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இது போல் புயல்களின் அதிகரிப்பு ஏன் என்று பார்த்தால், பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலால் கடலில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி புயல்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications