பைக்ல பெட்ரோல் கம்மியா இருக்கு..கட்டுங்க ரூ.250 அபராதம்..வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்!
திருவனந்தபுரம்: கேரளாவில் இருசக்கர வாகனத்தில் போதிய பெட்ரோல் இன்றி பயணித்ததற்காக ஒருவருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் போக்குவரத்து துறை போலீசாரிடம் சிக்கி நாயகர்களும், காமெடி நடிகர்களும் அபராதம் செலுத்தும் காட்சியை பார்த்திருப்போம். அதில் அபராதங்கள் விதிப்பதற்காக வித்தியாச வித்தியாசமாக காரணங்கள் கூறப்படும். அண்மையில் காருக்கு ஹெல்மெட் போடவில்லை என்றும் போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி சைக்களிக்கு லைசன்ஸா என்ற கேட்கும் வகையில் அவ்வப்போது சில சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறும்.

அந்த வகையில், போதிய பெட்ரோல் இன்றி இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டதற்காக கேரளாவில் நபர் ஒருவருக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் முக்கியப் பகுதியில் பேசில் ஷ்யாம் என்பவர் தனது புல்லட் வாகனத்தில் தனது அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளார். அப்போது சிறிது நேரம் தாமதமானதால், ஒருவழிச்சாலையின் எதிர்புறம் இரு சக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். இதனை கண்ட போலீசார், ஷ்யாமிற்கு ரூ.250 அபராதம் விதித்து சலான் கொடுத்துள்ளார்.
அதனை கட்டுவிட்டு அலுவலகம் சென்றபோது, சலானை பார்த்துள்ளார். அதில் போதிய பெட்ரோல் இல்லாததால் அபராதம் விதிக்கப்பட்டதாக காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை புகைப்படம் எடுத்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பகிரப்பட, அவர் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார். ஆனால் இதுபோன்ற காரணங்களுக்கு அபராதம் விதிக்கலாமா என்ற கேள்வியும் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.
அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆய்வு செய்து பார்க்கையில், பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அப்படி நிரப்பப்படவில்லை என்றால் வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.250 அபராதம் விதிக்கலாம். ஆனால் இந்த விதிமுறை தனியார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பொறுந்தாது.
இருந்தும் இதுபோன்ற காரணங்களுக்காக போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்கலாம் என்ற விதிமுறைகள் வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications