மாற்றி, மாற்றி பேசும் கேரள அரசு.. சபரிமலையில் 51 இளம் பெண்கள் தரிசனம் செய்யவில்லையாம்!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில், பருவ வயதை சேர்ந்த 51 பெண்கள் தரிசனம் செய்யவில்லை என்றும், வெறும் 2 பெண்கள்தான் தரிசனம் செய்தனர் என்றும், கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.
கேரள சட்டசபையில், இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முரளீதரன் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, இன்று, சுரேந்திரன் கூறியதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் 2 பேர்தான் தரிசனம் செய்துள்ளனர். இது தேவசம் போர்டு செயல் அதிகாரி வழங்கிய புள்ளி விவரமாகும் என்று கூறினார்.
ஜனவரி 18ம் தேதி கேரள அரசு, சபரிமலை வழக்கு தொடர்பாக சுப்ரீம் கரோ்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில், மொத்தம் 51 இளம் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அதில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பெயர்கள் மட்டுமின்றி, ஆண்கள் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இந்த விவரத்தை மலையாள டிவி சேனல் ஒன்று வெளியிட்டதால் சர்ச்சை வெடித்தது.
இதனிடையே, இப்போது கேரள அரசு சட்டசபையில் வைத்து அளித்துள்ள அதிகாரப்பூர்வ பதிலில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் தரிசனம் செய்தது 2 இளம் பெண்கள்தான் என்று கூறியுள்ளது.
கேரள அரசு குறிப்பிட்ட இரு பெண்களும், பிந்து மற்றும் கனக துர்கா என தெரிகிறது. அவ்விருவருக்குமே, வலதுசாரிகளால், உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல் வெளியானதால், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில், பருவ வயதை சேர்ந்த 51 பெண்கள் தரிசனம் செய்யவில்லை என்றும், வெறும் 2 பெண்கள்தான் தரிசனம் செய்தனர் என்றும், கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.
கேரள சட்டசபையில், இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முரளீதரன் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, இன்று, சுரேந்திரன் கூறியதாவது:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் 2 பேர்தான் தரிசனம் செய்துள்ளனர். இது தேவசம் போர்டு செயல் அதிகாரி வழங்கிய புள்ளி விவரமாகும் என்று கூறினார்.
ஜனவரி 18ம் தேதி கேரள அரசு, சபரிமலை வழக்கு தொடர்பாக சுப்ரீம் கரோ்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில், மொத்தம் 51 இளம் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அதில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பெயர்கள் மட்டுமின்றி, ஆண்கள் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இந்த விவரத்தை மலையாள டிவி சேனல் ஒன்று வெளியிட்டதால் சர்ச்சை வெடித்தது.
இதனிடையே, இப்போது கேரள அரசு சட்டசபையில் வைத்து அளித்துள்ள அதிகாரப்பூர்வ பதிலில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் தரிசனம் செய்தது 2 இளம் பெண்கள்தான் என்று கூறியுள்ளது.
கேரள அரசு குறிப்பிட்ட இரு பெண்களும், பிந்து மற்றும் கனக துர்கா என தெரிகிறது. அவ்விருவருக்குமே, வலதுசாரிகளால், உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல் வெளியானதால், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications