90 நாளில் 204 இலங்கை விமானங்களுக்கு எரிபொருள்! அசத்தும் திருவனந்தபுரம் விமான நிலையம்! லாபம் என்ன?
திருவனந்தபுரம்: பொருளாதார நெருக்கடி காரணமாக வெறும் 3 மாதத்தில் 204 இலங்கை விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி உள்ளன. இதனால் தரையிரங்கும் கட்டணம், வரி வருவாய் அதிகமாக கிடைக்கிறது.
Recommended Video
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலையில் மக்கள் வீதிகளில் இறங்கி தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
தற்போது இலங்கயைில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சேவை அமெரிக்காவில் தஞ்சமடையலாம் என கூறப்படும் நிலையில் அவர் விரைவில் இலங்கை திரும்பலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போக்குவரத்து சேவை பாதிப்பு
மேலும் இலங்கையில் நிலவி வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. பெட்ரோல், டீசல் உள்பட பல்வேறு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் அந்த நாட்டில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதேபோல் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

உதவும் திருவனந்தபுரம் விமான நிலையம்
இலங்கை ஏர்லைன்ஸ் சார்பில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அதிக லாபம் கொடுக்கும் வகையிலான விமான சேவைகள் மட்டும் இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் இருந்து இயங்கி வருகிறது. அதாவது இலங்கையில் இருந்து புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்பட பிற நிறுவனங்களின் விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி வருகின்றன. இந்த விமான நிலையம் தொழில்அதிபர் அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. அதோடு மத்திய, மாநில அரசுக்கும் வரிவருவாய் கிடைத்து வருகிறது

200யை கடந்த விமானங்கள்
இந்நிலையில் தான் வெள்ளிக்கிழமை இலங்கையில் இருந்து வந்த 4 சர்வதேச விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி கொண்டன. இதில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 3 விமானங்கள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சென்றன. ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவிற்கு புறப்பட்டு சென்றது. இதன்மூலம் இலங்கை பொருளாதார நெருக்கடியால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய விமானங்களின் எண்ணிக்கை என்பது 200யை கடந்துள்ளது.

90 நாளில் 204 விமானங்கள்
அதாவது மே 27 ம் தேதி முதல் 90 நாட்களுக்குள் மொத்தம் 204 விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிரங்கி எரிபொருள் நிரப்பி உள்ளன. இதில் பாதிக்கு மேல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை சேர்ந்தவையாகும். இதில் மெல்போர்ன், சிட்னி, பாரிஸ் மற்றும் பிராங்பூர்ட் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 130 விமானங்கள், துபாய் சென்ற 11 பிளைட்பாய் விமானங்கள், ஷார்ஜா சென்ற 45 ஏர் அரேபியா விமானங்கள், மஸ்கட் சென்ற 9 ஓமன் ஏர் விமானங்கள், பஹ்ரைன் சென்ற 7 கல்ப் விமானங்கள் உள்ளிட்டவை முக்கியமானதாகும்.

வருவாய் அதிகரிப்பு
இதன்மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிரங்கும் கட்டணமாக மட்டும் சுமார் ரூ.1.5 கோடி வரை கிடைத்துள்ளது. இதுதவிர எரிபொருள் நிரப்பும் செலவு, வரிவருவாய் தனியாக உள்ளது. இதனால் இது மத்திய, மாநில அரசு மற்றும் விமான நிலையத்தை நிர்வகிக்கும் அதானி குழுமத்துக்கு லாபமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் தற்போது சில விமானங்கள் தற்போது கொச்சி விமான நிலையத்தையும் எரிபொருள் நிரப்ப பயன்படுத்த துவங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications