லேப்டாப் போராட்டம் என்றால் என்ன? கேரள மாணவர்களால் திடீர் பரபரப்பு.. பின்னணி என்ன?
திருவனந்தபுரம்: கேரளாவில் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய லேப்டாப் போராட்டம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கேரளா மாநில எப்போதும் விந்தையான போராட்டங்களுக்கு பெயர் போனவை என்றே கூறலாம். வடமாநிலங்களில் மாட்டுக்கறி உண்ணக் கூடாது என்று யாராவது பேசினால், அங்கு மாட்டுக் கறி திருவிழாவே நடத்தப்படும். அதற்கு அம்மாநில மாணவர்கள் மத்தியில் அரசியல் செயல்பாடுகள் மிகமுக்கிய காரணமாக இருக்கிறது.

புதிய போராட்டம்
கல்லூரி காலத்திலேயே அரசியல் கட்சிகளின் மாணவர்கள் அமைப்பில் சேர்வதற்கான வாய்ப்புகள் கேரளாவில் இருக்கும். மாணவர்களுக்கு பிரச்னை என்றால், மாணவ இயக்கங்கள் முன் நின்று போராட்டத்தில் ஈடுபடும். இந்த நிலையில் கேரள மாணவர்களால் லேப்டாப் போராட்டம் என்று புதிய போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நிழற்குடை
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள சிஇடி பொறியியல் கல்லூரி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் குடியிருப்புவாசிகள் அசோசியேஷன் சார்பில் 9 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிழற்குடை இருக்கையில் பொறியியல் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் அமர்வது வழக்கம்.

இருக்கைகள் மாற்றம்
அப்போது மாணவ, மாணவிகள் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த அப்பகுதியினர், அசோசியேஷன் சார்பில் பேருந்து நிழற்குடையில் உள்ள பெஞ்ச் போன்ற இருக்கைகளை மாற்றிவிட்டும், இடைவெளி விட்டு மூன்று இருக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

லேப்டாப் போராட்டம்
இதனால் கோபமடைந்து பேருந்து நிழற்குடைக்குச் சென்று மாணவ, மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு மாணவர்கள் மடியில் மாணவிகளும், மாணவிகள் மடியில் மாணவர்களும் அமர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இதற்கு லேப்டாப் போராட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்திற்கு ஏராளமான மாணவ இயக்கங்கள் ஆதரவளித்தன.

மேயர் ஆதரவு
இந்தத் தகவலறிந்த திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆர்யா ராஜேந்திரன் கூறுகையில், மாணவர்களின் போராட்டத்தால் இங்குள்ள பிரச்னை பற்றி அறிந்தேன். மாணவ, மாணவிககளுக்கு நிழற்குடையைப் பயன்படுத்த முழு உரிமை உண்டு. இங்கு புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப்படும். அது ஆண், பெண் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications