Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

118 சட்டசபை தொகுதிகளை கவர் செய்த எடப்பாடி பழனிசாமி.. அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு முக்கிய அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" சுற்றுப்பயணத்தில் 118 சட்டசபை தொகுதிகளுக்குச் சென்றுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் இதுவரை 3 கட்டங்களாக 118 சட்டப்பேரவை தொகுதிகளில் பரப்புரையை நிறைவு செய்துள்ளார், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

aiadmk edappadi palaniswami 2026 Assembly election

வரும் திங்கட்கிழமை முதல் மதுரையில் 4 ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப்பயணத்தால் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருப்பதாக அக்கட்சியின் தலைமை கருதுகிறது. இந்த சூழலில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்துக்கு இடையே நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என அமித் ஷா திட்டவட்டமாக கூறி வருகிறார். மேலும் தவெக மாநாட்டில் அதிமுக மீது விமர்சனம் வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். இந்த விஷயங்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதங்களுக்கு உள்ளான நிலையில், இன்று அவை பற்றி விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தில் உணர்ந்த விஷயங்கள் குறித்தும் பேச இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி, சட்டமன்றத் தேர்தல் பணிகள், பூத் கமிட்டி, மற்றும் கூட்டணியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை அதிமுக மேற்கொண்டு வரும் நிலையில் அது தொடர்பான ஆலோசனைகளை கட்சியினருக்கு வழங்குவார் எனக் கூறப்படுகிறது.

மா.செக்கள் கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 30.8.2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக அதிமுக தலைமை கழகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகபினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர்.

இந்தக் கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளுடன் 85 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். பூத் கமிட்டியை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி இன்றைய கூட்டத்திலும் அது தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்.

இதில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடித்ததாக தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைவரும் முழுவீச்சில் தயாராக வேண்டும் என்றும், நிச்சயம் நமது உழைப்பு அதிமுகவை ஆட்சியில் அமர வைக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+