Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னும் ஒரே மணி நேரம்.. ஜனநாயகனால் பராசக்திக்கு வந்த திடீர் குழப்பம்! திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தாண்டு பொங்கலுக்கு எந்தப் படம் ரிலீஸ் ஆகும் என்பதில் கடைசி வரை குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே பராசக்தி நாளை ரிலீஸ் ஆகும் நிலையில், அதற்கு எவ்வளவு ஸ்க்ரீன் கிடைக்கும்.. ஜனநாயகன் மேல்முறையீடு காரணமாக பராசக்திக்கு ஏற்பட்டுள்ள இழுபறி குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

தமிழ் சினிமாவில் பொங்கல் ரிலீஸில் இதுவரை இல்லாத வகையில் இந்தாண்டு பெரிய குழப்பம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. பொங்கல் ரீலீஸுக்கான தேதியே வந்துவிட்ட போதிலும் கூட இன்னும் இதில் எந்தவொரு தெளிவும் இல்லாத ஒரு சூழலே இருந்து வருகிறது.

Parasakthi Jana Nayagan Vijay

பொங்கல் ரேஸ்

முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படமே பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. விஜய்யின் ஜனநாயகன் படம் முதலில் கடந்தாண்டு அக்டோபர் மாத ரிலீஸுக்கே திட்டமிடப்பட்டு இருந்தது. இருப்பினும், படம் ரெடியாக தாமதமானதால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ரிலீஸாவதால் தியேட்டர்கள் எப்படி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதில் கேள்வி எழுந்தது. இருப்பினும், விஜய்க்கு அதிகத் தியேட்டர்களும் சிவகார்த்திகேயன் படத்திற்குச் சற்றே குறைவான தியேட்டர் கிடைக்கும் எனச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் கடைசி நேரத்தில் ஜனநாயகன் ரிலீஸாவதில் சிக்கல் உருவானது.

ஜனநாயகன்

அந்த படம் இன்று ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் சென்சார் சான்றிதழ் வழங்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டாலும் கூட சென்சார் போர்ட் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் பட ரீலீஸ் ஆவதில் சிக்கல் தொடர்கிறது.

பராசக்தி

மறுபுறம் பராசக்தி படத்திற்கும் கூட சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் குழப்பம் இருந்தது. படம் நாளை ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், இன்று வரை சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் குழப்பம் இருந்தது. தமிழகத்தில் ஓரிரு தியேட்டர்களில் மட்டுமே புக்கிங் ஓபன் ஆகியிருந்த நிலையில், பிற மாநிலங்களில் புக்கிங் ஓபன் ஆகாமல் இருந்தது. இதனால் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்பதில் குழப்பம் இருந்தது. இந்தச் சூழலில் இன்று படத்திற்கு U\A சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன் மூலம் நாளை பராசக்தி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

திருப்பூர் சுப்பிரமணியம்

ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா என்பதில் குழப்பம் இருக்கும் நிலையில், எந்த படத்திற்கு எவ்வளவு ஸ்கிரீன்கள் கிடைக்கும் என்பதில் குழப்பம் இருக்கிறது. இது தொடர்பாகப் புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், "முதலில் பராசக்தி படத்திற்கு 40% திரையரங்குகளும், ஜனநாயகனுக்கு 60% திரையரங்கும் நாங்கள் ஒதுக்கி இருந்தோம்.

இன்று காலை தனி நீதிபதி படத்திற்கு சென்சார் சான்றிதழ் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் எனச் சொல்லி இருந்தார். அதற்கு எதிராக அப்பீல் செய்துள்ளனர். 2.15 அல்லது 2.30 மணி அளவுக்கு மேல்முறையீடு குறித்து என்னவென்று பார்த்துச் சொல்வதாக நீதிபதி சொல்லி இருந்தார். எனவே, நீதிபதி என்ன சொல்கிறார் என்பதைப் பொறுத்தே திரையரங்கு ஒதுக்கீடு இருக்கும்" என்றார்.

என்ன நடக்கும்!

அதாவது முதலில் ஜனநாயகன்- பராசக்தி படங்களுக்கு 60-40 என்று தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இப்போது சிவகார்த்திகேயன் படம் மட்டுமே ரிலீஸ் ஆவதால் அதிகபட்சத் தியேட்டர்களில் பராசக்தி வெளியாகும். பிற்பகலில் தான் ஜனநாயகன் மேல்முறையீடு மனு குறித்துத் தெளிவு கிடைக்கும் என்பதால் அப்போது தான் எவ்வளவு தியேட்டர் என்பது இறுதியாகும். சிக்கல் தீர்ந்து ஓரிரு நாட்களில் ஜனநாயகன் ரிலீஸானால்.. பராசக்தி தியேட்டர்கள் குறைக்கப்பட்டு, ஜனநாயகனுக்கு அதிகத் தியேட்டர்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+