நாட்டையே உலுக்கிய டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
டெல்லி: டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இன்று மாலை 6.52 மணியளவில் கார் ஒன்று திடீரென வெடித்தது. தொடர்ந்து அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. மேலும், அருகில் இருந்த சில வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளது. மேலும் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி விமான நிலையம், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வெடிமருந்துகளை கண்டறியும் கருவிகளுடன் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான தகவல்களை ஒவ்வொரு நிமிடமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பகிர்ந்து வருகிறோம் என்று டெல்லி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
பிரதமர் மோடி இரங்கல்
டெல்லி கார் குண்டுவெடிப்பில் உறவினர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவுகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகளுடன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேசன் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் மனதை நொறுங்கச் செய்கிறது. கவலையளிக்கிறது. அப்பாவி மக்கள் உயிரிழந்தது கவலையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் , உறவினர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பல அப்பாவி உயிர்களை பலிகொண்டதால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அங்கிருந்து வரும் காட்சிகள் மனதை உடைக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்
எடப்பாடி பழனிசாமி
டெல்லி செங்கோட்டையில் ஏற்பட்ட சம்பவத்தில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பரிதாபாத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசும், போலீசாரும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
-
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே












Click it and Unblock the Notifications