உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவிற்கு 2-வது இடம் !
டெல்லி: உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது.
2015-ம் ஆண்டிற்கான விவசாய புள்ளிவிபரம் அடங்கிய 'horticultural statistics at a glance 2015' என்ற கையேடு ஒன்றை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் விவசாயத்தில் காய்கறிகளை விட பழங்களை இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக அளவில் பழங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது என்றும் சீனா முதலிடத்தில் உள்ளது என்ற தகவலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, மகாராஷ்டிரா மாநிலம் பழ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேச ஆகிய மாநிலங்கள் உள்ளன.
குறிப்பாக, 2014-15-ம் ஆண்டில் பழங்களிலேயே அதிகமாக இந்தியாவின் திராட்சைப்பழ ஏற்றுமதி ரூ.1,086 கோடி அளவில் 107.3 ஆயிரம் டன்களை எட்டியுள்ளது. மாம்பழம் மற்றும் வாழைப்பழ ஏற்றுமதியும் உச்சத்தை தொட்டுள்ளன.
அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்:
சீனா - (154.364 மில்லியன் டன்)
இந்தியா - (82.631 மில்லியன் டன்)
பிரேசில் - (37.774 மில்லியன் டன்)
அமெரிக்கா - (26.986 மில்லியன் டன்)
ஸ்பெயின் - (17.699 மில்லியன் டன்)
மெக்ஸிகோ - (17.553 மில்லியன் டன்)
இத்தாலி - (16.371 மில்லியன் டன்)
இந்தோனேசியா - (16.003மில்லியன் டன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications