ஜனாதிபதி தேர்தல்2017: ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லி: நாட்டின் புதிய ஜனாதிபதியாக பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் 14-ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை ஆகியவற்றின் வாக்குகளைச் சேர்த்து அவருக்கு மொத்தம் 5,37,683 வாக்குகள் கிடைக்கும். எனினும், வெற்றியை உறுதி செய்ய அவருக்கு கூடுதலாக 12,000 வாக்குகள் தேவை என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் ராம்நாத் கோவிந்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

ராம்நாத் கோவிந்த் வெற்றி உறுதி
இதனால் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இதுதவிர சமாஜவாடி கட்சியில் முலாயம் சிங் ஆதரவு எம்.பி., எம்எல்ஏக்களும் ராம்நாத் கோவிந்துக்கு தங்களது வாக்குகளை அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மீரா குமார் வெற்றிக்கு போதிய வாக்குகள் இல்லை
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மீரா குமாருக்கு, இடதுசாரிக் கட்சிகள், திமுக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் முழு ஆதரவை தெரிவித்துள்ளன. எனினும், அவரின் வெற்றிக்குத் தேவையான வாக்குகளைப் பெற முடியாது என்பதே இப்போது வரைக்கும் உள்ள சூழலாக இருக்கிறது.
Recommended Video


காங்கிரஸ் அப்செட்
இருந்தபோதிலும் கடைசி நேரம் வரை பிராந்தியக் கட்சிகளின்ஆதரவைத் திரட்டும் பணியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டிருந்தது. ஆனால் அதில் பெரிய அளவுக்கான முன்னேற்றம் இல்லையென்பதால் காங்கிரஸ் தலைமை அப்செட் ஆகியுள்ளது.

மொத்தம் 4,896 பேர் வாக்களிப்பு
நாடு முழுவதும் தேர்தலில் 776 எம்.பி.க்கள், 4120 எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் ஒரு வாக்குப் பதிவு மையம், மாநில சட்ட சபைகளில் ஒரு வாக்குப்பதிவு மையம் என மொத்தம் 32 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்காக 33 கண்காணிப்பாளர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

20ம் தேதி தேர்தல் முடிவு
ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு என்பது 708 ஆகும். எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு அவர்கள் சார்ந்த மாநில மக்கள்தொகைக்கு ஏற்ப மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு அனைத்து வாக்குப் பெட்டிகளும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு ஜூலை மாதம் 20 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்?












Click it and Unblock the Notifications