2.89 கோடி வாக்காளர்கள் மொத்தமாக நீக்கம்! SIR பணிகளுக்கு பின் தலைகீழாக மாறிய உபி வாக்காளர் பட்டியல்
லக்னோ: SIR பணிகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் இப்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மொத்த வாக்காளர்களில் 18.70% பேர், அதாவது 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் எண்ணிக்கை 12.55 கோடியாகக் குறைகிறது.
பீகாரில் கடந்த மாதம் தேர்தல் நடந்த நிலையில், அதற்கு முன்பு அங்கு எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டன. அதேபோல மற்ற தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, உத்தர பிரதேசம் மாநிலங்களில் SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்கனவே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் SIR பணிகளுக்குப் பிறகு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இப்போது உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது மொத்த வாக்காளர் பட்டியலில் 18.70% பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக 46 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டதாகச் சொல்லி நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 15.44 கோடியாக இருந்த உத்தரப் பிரதேச வாக்காளர்களின் எண்ணிக்கை, 12.55 கோடியாகக் குறைகிறது.
தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு லக்னோவில் 39.9 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது அது 27.9 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது 30 சதவிகித வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதேபோல், லலித்பூரில் வாக்காளர் எண்ணிக்கை 9.5 லட்சத்தில் இருந்து 8.6 லட்சமாகக் குறைந்து. அதாவது 10 சதவிகித சரிவைக் கண்டது.
மொத்தம் 2.89 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதில், 2.17 கோடி பேர் வேறு இடங்களுக்கு மாறியவர்கள் ஆகும். 46.23 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்றும் 25.47 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்ததாக நீக்கப்பட்டுள்ளது.
இப்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் எதாவது பிழைகள் இருப்பதாகக் கருதினால் பொதுமக்கள் முறையீடு செய்யலாம். அவை குறித்து விசாரித்த தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கையை எடுக்கும். இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் 6 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications