Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசி சீரியசா சபதம் போட்ட நேரத்தில்.. டார்ச்சர் அனுபவித்த கோகுல இந்திரா- வீடியோ!

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சீரியசாக சபதம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது குண்டர் ஒருவரால் மோசமான டார்ச்சரை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சந்திக்க நேரிட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் 3 முறை ஓங்கி அடித்து, பல்லைக் கடித்து, கர்ண கொடூரமாக ஆவேசமாக சசிகலா ஒரு பக்கம் சத்தியம் செய்து கொண்டிருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, குண்டர் ஒருவரால் பெரும் துன்பத்தை அனுபவிக்கவும் நேரிட்டது.

பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு செல்வதற்கு முன்பாக சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போனார். அங்கு அதிமுகவின் வளர்மதி, கோகுல இந்திரா தவிர வேறு யாரும் தெரிந்த முகங்களே இல்லை.

Gokula Indira faces torture by Mannaargudi Goon

மொத்தமே 50 பேர்தான் இருந்திருப்பார்கள்.... பெரும்பாலானோர் குண்டர்களாகத்தான் காட்சி தந்தார்கள். சிலர் சசிகலாவின் உறவினர்கள். ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தி 3 முறை ஓங்கி அடித்து பழிதீர்ப்பதாக சத்தியம் செய்து கொண்டிருந்தார்.

இதை அருகே நின்ற வளர்மதி, பயங்கர மிரட்சியும் பார்த்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் சசிகலாவுக்குப் பின்னால் இருந்த கோகுல இந்திராவோ குண்டர் ஒருவரின் குடைச்சலில் படாதபாடுபட்டுவிட்டார்.

வீடியோ:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+