ஜெஸிலா பானுவின் நம் நாயகம் நூல்: சென்னையில் ஜன.23ல் வெளியீடு
சென்னை: இதிகாசங்களை காப்பியங்களாக படிப்பதை விட சின்னச் சின்ன கதைகளாக படிப்பது எளிதில் மனதில் பதியும், சிறுவர்களும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள். அதே பாணியில் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புத சம்பவங்களை 'நம் நாயகம்' என்ற தலைப்பில் குட்டிக் கதைகளாக எழுதியுள்ளார் துபாய் எழுத்தாளர் ஜெஸிலா பானு.
ஜெஸிலா பானு எழுதிய நம் நாயகம் நூல் வெளியீட்டு விழா ஜனவரி 23ம் தேதி சென்னை மைலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற உள்ளது. நம் நாயகம் நூலினை வெளியிட்டு வாழ்த்துகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

இறைத் தூதராய் இந்த உலகில் அவதரித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அகில உலகத்திற்கே ஓர் அழகிய முன் மாதிரி. அவர்கள் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவங்களை 63 தலைப்புகளில் எழுத்தாளர் ஜெஸிலா பானு இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார்.
நபிகளாரின் போதனைகளை குழந்தைகளுக்காக அவர்கள் மொழியிலேயே சின்ன சின்ன கதைகளாக வடித்துத் தந்திருக்கிறார் பானு. இதனால்தான் இந்த நூலைச் சிறாருக்கான சீறா என்று கவிக்கோ அப்துல் ரகுமான் வாழ்த்துரையில் வர்ணித்துள்ளார்.
வரும் 23ம் தேதி சென்னை மைலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நம் நாயகம் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
விழாவிற்கு தலைமை ஏற்கிறார் துபாய் ஈடிஏ நிறுவனங்கள் குழும துணைத் தலைவர் செய்யது எம்.சலாஹூதீன். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், வேலூர் லோக்சபா தொகுதியின் முன்னாள் எம்.பி எம். அப்துல் ரகுமான், சாத்தான் குளம் அப்துல் ஜப்பார், திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஆர். பாண்டியராஜன், ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். புதியதலைமுறை இதழின் ஆலோசகர் மாலன், கவிஞர் யுகபாரதி ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். ஏற்புரை வழங்குகிறார் ஜெஸிலா பானு. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ஆசிக் மீரான்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications