மனதுக்கு சரி என்று பட்டதைத்தான் அப்பா செய்வார்! - சௌந்தர்யா
அரசியல் விஷயத்தில் மனதுக்கு சரி என்று பட்டதைத்தான் அப்பா செய்வார் என்று ரஜினி மகள் சௌந்தர்யா தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து பேசிய அவர், மீண்டும் தொடர்ந்து ரசிகர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளார்.

ரஜினி கட்சி
ரசிகர்கள் சந்திப்பு முடிந்ததும் ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு நிகழும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சந்திப்புகள்
தற்போது ‘காலா' படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ரஜினி இடையிடையே அரசியல் தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசி வருகிறார். பல பிரமுகர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

அரசியல்தான்
சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அரசியல் குறித்துப் பேசி வருவதாக ஒப்புக் கொண்டார். ஆகஸ்டு மாதம் ரசிகர்களைச் சந்தித்து பேசிய பிறகு அவர் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

சௌந்தர்யா
இந்த நிலையில் ரஜினி அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக மும்பையில் அவரது மகள் சௌந்தர்யா நிருபர்களிடம் பேசுகையில், "அப்பா எப்போதுமே மனதுக்கு சரி என்று பட்டதைத்தான் செய்வார். அவர் எதைச் செய்தாலும் சரியான நேரத்தில் செய்வார்.

ஆதரவு
அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் சரி, நாங்கள் அவருக்கு ஆதரவாகவே இருப்போம்," என்றார்.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
அவிநாசி தொகுதி: பாஜக சுருக்குவலையில் எடப்பாடி..இப்படி பண்ணிருக்க கூடாது..குமுறும் தனபால் ஆதரவாளர்கள் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications