திமுகவில் இணைந்த வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர்.. 3 நாட்களில் 3 பேர் 2 கட்சிகளுக்குத் தாவல்!
நெல்லை: வாசுதேவநல்லூர் தனித் தொகுதி பாமக வேட்பாளர் காசி பாண்டியன் திமுகவில் சேர்ந்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் தனித்தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் காசி பாண்டியன். தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் காசி பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாங்குநேரி தொகுதி பாமக வேட்பாளர் திருப்பதி அதிமுகவில் சேர்ந்தார். அவர் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி நேற்று அதிமுகவில் இணைந்தார். அவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அடுத்தடுத்து 3 வேட்பாளர்கள் கட்சி தாவியுள்ளதால் பாமக மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.