நஷ்டத்தில் ஓடினாலும் 24,000 ஊழியர்களுக்கு 'ஃப்ரீ டிக்கெட்' கொடுக்கும் ஏர் இந்தியா
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்கள் 24 ஆயிரம் பேருக்கு இலவசமாக பயண டிக்கெட்டுகளை அளித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ.3,900 கோடி நஷ்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி கடன் சுமை உள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் தனது ஊழியர்கள் 24 ஆயிரம் பேருக்கு இலவச பயண டிக்கெட்டுகளை வழங்கியுள்ளது.

டைரக்டர்கள் மற்றும் இணை நிர்வாக இயக்குனர்களுக்கு ஆண்டுக்கு 24 இலவச டிக்கெட்டுகள் கிடைக்கும். அதுவே துணை பொது மேலாளர்கள் போன்றோருக்கு ஆண்டுக்கு 20 டிக்கெட்டுகள் இலவசமாக கிடைக்கும்.
20 வருட அனுபவத்திற்கு கீழ் உள்ள உதவி பொது மேலாளர்கள், மூத்த உதவி பொது மேலாளர்கள் ஆகியோருக்கு 12 டிக்கெட்டுகளும், 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு 16 டிக்கெட்டுகளும் கிடைக்கும். மீதமுள்ள ஊழியர்களில் 1 முதல் 20 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு 8 இலவச டிக்கெட்டுகள் கிடைக்கும். ஏர் இந்தியா நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்பவர்களுக்கு 12 டிக்கெட்டுகள் கிடைக்கும்.
மேலும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. அவர்கள் ஓய்வு பெற்ற போது எத்தனை ஆண்டுகள் பணியில் இருந்தனர் என்பதன் அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
இதில் பாதி டிக்கெட்டுகளை சர்வதேச பயணத்திற்கு பயன்படுத்தலாம். நஷ்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்த திட்டத்தை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகையில், முன்பெல்லாம் ஊழியர்களுக்கு அளவில்லா இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இந்த புதிய திட்டம் மூலம் இலவச டிக்கெட்டுகளுக்கு ஒரு அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications