150 கிலோ எடை மெகா திருக்குறள் நூல் வெளியீடு

உலகப் பொது மறையான திருக்குறளை பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார் ராஜா ஷெரீப். 7 அடி உயரமும், 4 அடி அகலமும். 150 கிலோ எடையும் கொண்ட இந்த மெகா சைஸ் திருக்குறள், 6 மாத கால உழைப்பில் மலர்ந்துள்ளது.
குறளும் அதற்கான தெளிவுரையும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 304 பக்கங்கள் கொண்டதாக இந்த பிரமாண்ட நூல் உள்ளது. இந்த பிரம்மாண்ட முயற்சி கையெழுத்தால் ஆனது என்பது இதன் கூடுதல் சிறப்பு. சென்னையில் நடந்த இதன் வெளியீட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
திருக்குறளை சாதனைக்காக இப்படி வடிவமைக்கவில்லை. உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருவள்ளுவரின் திருக்குறளின் மீது மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். திருக்குறளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்றுதான் இவ்வளவு பெரிதாக வடிவமைத்தேன் என்கிறார் ராஜா ஷெரீப்.
இந்த பிரமாண்ட நூலை உருவாக்குவதற்காக, குஜராத்தில் இருந்து சிந்தடிக் ஷீட்டுகளை பிரத்யேகமாக வரவழைத்து செய்துள்ளார் ராஜா. தினமும் 8 மணிநேரம் உழைத்திருக்கிறார். இவரது முந்தைய படைப்புகளும் அதிகம் பேசப்பட்டவைதான்.
2003ம் ஆண்டு திருக்குறளை பனை ஓலையில் எழுதியும், 2006ம் ஆண்டு 250 கிலோ எடை கொண்ட கையால் எழுதப்பட்ட குரான் நூலை வெளியிட்டும் பிரமிக்க வைத்தவர் இலக்கிய ஆர்வம் படைத்த ராஜா ஷெரீப்.
உலகிலேயே கையால் எழுதப்பட்ட பெரிய நூல் இதுதான் என்கிறார் ராஜா ஷெரீப். மார்க்கர் பேனாவைப் பயன்படுத்தி எழுதியுள்ளார் ஷெரீப். அவரது இந்த பெரும் முயற்சிக்கு குடும்பத்தினர் பேருதவியாக இருந்துள்ளனர்.
ஷெரீப்பின் இந்த பிரமாண்ட குறள் நூலில் ஒவ்வொரு பக்கத்திலும் 5 குறள்களும், தெளிவுரையும் இடம் பெற்றுள்ளது.
இந்த பிரமாண்ட நூலை அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்குக் கொடுக்கலாம் என சிலர் யோசனை கூறியுள்ளனராம். ஆனால் அதுகுறித்து இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்ைல என்கிறார் ராஜா ஷெரீப்.
ஷெரீப்பின் அடுத்த கட்ட திட்டம், திருக்குறளை இதேபோன்ற பிரமாண்ட சைசில், ஆங்கிலத்தில் எழுதி வெளியிடுவதுதானாம்.
திருக்குறளுக்கு புது மகுடம் சூட்டியுள்ள ராஜா ஷெரீப், குறள் போல் நீடூழி வாழ்க!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications