புதிய தலைமைச் செயலகத்திற்காக கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது

சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் எழிலுற கட்டப்படவுள்ளது.இதற்காக அந்த வளாகத்தில் உள்ள பல கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. சிபிசிஐடி தலைமை அலுவலகமும் இடிக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் புகழ் பெற்ற கலைவாணர் அரங்கமும் இடிக்கப்படவுள்ளது.
1954ல் சட்டசபை கூட்ட அரங்கமாக சில காலம் செயல்பட்ட பெருமை கொண்டது கலைவாணர் அரங்கம். பல புகழ் பெற்ற தேசியத் தலைவர்களும், மாநிலத் தலைவர்களும் உரையாற்றிய பெருமையும் கொண்டது.
தற்போது புதிய தலைமை செயலகம் கட்டப்பட உள்ளதால் கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது.
1957ம் ஆண்டு இந்த அரங்கத்துக்கு 'பாலர் அரங்கம்' என்று பெயர் சூட்டினார் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. குழந்தைகள் பங்குபெறும் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் இந்த அரங்கத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
குழந்தைளுக்கான திரைப்படங்களும், தரமான ஆங்கில படங்களும் திரையிட்டு காண்பிக்கப்பட்டு வந்தன. குழந்தைகளுடன் பெரியவர்களும் இந்த படங்களை ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
பின்னர் பாலர் அரங்கத்தில் படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இதை வர்த்தக ரீதியில் பயன்படுத்த அரசு முடிவுசெய்து, புதுப்பித்து, 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது கலைவாணர் அரங்கம் என பெயர் மாற்றம் கண்டது. புதிய கலைவாணர் அரங்கத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இத்தகைய பெருமை படைத்த கலைவாணர் அரங்கம் தற்போது இடிபடவுள்ளது. இருப்பினும் அருகே உள்ள காலியிடத்தில் புதிய கலைவாணர் அரங்கம் கட்டப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது 3000 இருக்கைகள் கொண்டதாக அமையும்.
தற்போது ஏற்கனவே பல நிகழ்ச்சிகள் புக் ஆகியுள்ளதால் அவற்றை முடிப்பதற்கு வசதியாக வருகிறசெப்டம்பர் மாதம் வரை இடிப்பதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் கலைவாணர் அரங்கம் இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications