பார்வையாளர்களை ஈர்க்கும் குற்றாலம் அருகே உள்ள கேரளா சுற்றுலா தலங்கள்
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் படையெடுக்கிறார்கள்.
செந்தூருணி வனவிலங்கு சரணாலாயம், தென்மலை சூழ்நிலை சுற்றுலா (எக்கோ) வளர்ச்சி திட்டத்ம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாக உள்ளன.
இவ்விரு இடங்களும் குற்றாலத்திலிருந்து சுமார் 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளன.
செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்
செந்தூருணி என்ற சொல் செங்குருணி என்ற இப்பகுதிக்கே சொந்தமான ஒரு அரிய வகை மரத்தின் பெயரிலிருந்து மருவி அழைக்கப்படுவதாகும். செந்தூருணி வனவிலங்கு சரணாலயம் 1984ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
செந்தூருணி, குழத்துபுழா நதிக்கூடங்களில் கட்டப்பட்டுள்ள பாராப்பர் அணைகட்டின் விளைவாக 26 சதுரகிமீ பரப்பளவுள்ள ஒரு செயற்கை ஏரியை உருவாக்கியுள்ளது. இந்த அணையி்ன் கட்டுமானத்தினால் மேலும் 23 கிமீ சதுர வனப்பகுதி சரணாயலத்துடன் இணைந்துள்ளது.
செந்துரூணி வனவிலங்கு சரணாயமாக உருவாகும் முன்பு தென்மலை வனசரகத்தின் கீழ் இருந்தது. வனப்பகுதியில் மரங்களை வெட்டுதலில் இரண்டு வகை உண்டு. ஒன்று அனைத்து மரங்களையும் வெட்டுதல், மற்றொன்று தேர்ந்தெடுத்து வெட்டுதல் என்று இரண்டு வகை உண்டு.
இந்த இரண்டு வகை மரம் வெட்டும் முறைகள் ஒரு காலத்தில் இந்த வனப்பகுதியில் வழக்கத்தில் இருந்து வந்தது. இந்த வகைகளில் ஓன்றான அனைத்து மரங்களையும் வெட்டுதல் என்ற முறையில் இப்பகுதியில் உள்ள வனப்பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டு மலைத் தோட்ட மரங்கள் வளர்க்கும் திட்டம் குறிப்பாக ரப்பர எஸ்டேட்டுகளாக உருமாறியது.
அதுமட்டுமல்லாது 1940களில் திருவனந்தபுரம்-செங்கோட்டை சாலை உருவாக்கப்பட்ட போது இந்த வனப்பகுதி பெருமளவு சீர்குலைந்தது.
இத்தகைய சீக்குலைவுக்கு பின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க தகுந்த பகுதியாக செந்தூருணி பள்ளத்தாக்கு பகுதியை கொல்லம் வனச்சரக கமிட்டியின் சிபாரிசின் பேரில் கேரள அரசு செந்தூருணியை வனவிலங்கு சரணாலயமாக 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் நாள் அறிவித்தது.
தற்போது இந்த வனவிலங்கு சரணாலயம் திருவனந்தபுரம் வனவிலங்கு கோட்டத்தின் கீழ் நிர்வாகிக்கப்படுகிறது. இந்த வனவிலங்கு சரணாலயம் 100.32 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. எனினும் தமிழகத்துடன் உள்ள எல்கை சர்வே இதுவரையிலும் முழுமை பெறாத நிலையில் உள்ளது.
செந்தூருணிக்கு ஒரு வரலாற்று சிறப்பு உண்டு. புனே டெக்கான் கல்லூரியின் ஒரு பரிவான தொல்பொருள் ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த டாக்டர் பி.ராஜேந்திரன் என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வில் கற்காலத்தின் ஒரு மிகப்பெரிய குகையின் அகழ்வுகள் செந்தூருணி ஆற்றின் வடமேற்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு கலாச்சாரம் இந்தியாவின் மிக பழமையான நாகரீகம் என்பது இந்த ஆய்வின் முலம் கண்டறியப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகத்தைவிட மிகவும் பழமை வாய்ந்த நாகரீகமாக செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு தற்போது கருதப்படுகிறது.
அதாவது இந்த ஆற்று பள்ளதாக்கு நாகரீகம் கிமு 4400 முதல் கிமு 3700 வரைஉள்ள காலகட்டத்தை சார்ந்தது. ஆனால் செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு நாகரீகம் கி்மு 5210 முதல் கிமு 4420க்கும் உள்பட்ட காலகட்டத்தை சார்ந்தது. இங்குள்ள குகை ஓவியங்கள் மத்திய இந்தியாவின் குகை ஓவியங்களுடன் ஓப்பிடலாம்.
இங்கு காணப்படும் குகை ஒரே நேரத்தில் சுமார் 20 மனிதர்களை தன்னுள் அடக்கிக் கொள்ளும் அளவில் உள்ளது. குகையின் முன்னாள் சற்று கீழே காணப்படும் சதுப்பு நிலம் ஒரு காலத்தில் ஏரியா இருந்திருக்கலாம் என டாக்டர ராஜேந்திரன் ஆய்வு கூறுகிறது.
செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு நாகரீகம் வரலாற்றிற்கு முந்தைய ஒரு நாகரீகத்திற்கு ஊக்கமளித்தது என்ற பெருமையை பெருகிறது.
இந்த சரணாலயத்தில் பல்வேறு அரியவகை மரங்கள், செடி, கொடிகள், ஏராளமான வனவிலங்குள், நீரோடைகள், சிறு சிறு அருவிகள் உள்ளது. செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும். தென்மலை கல்லடா அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தின் வனவிலங்கு காப்பாளர் அலுவலகத்தை அணுகி அனுமதி பெறலாம்.
செந்தூருணி வனவிலங்கு சரணாலயம் செல்ல தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து (அச்சன்கோவில் தவிர) கேரள செல்லும் அனைத்து தமிழக மற்றும் கேரள அரசு பேருந்துகளில் தென்மலை கல்லடா அணைக்கட்டு வரை செல்லலாம்.
ரயில் மூலம் செல்ல விரும்புவோர் செங்கோட்டையிலிருந்து புனலூர் செல்லும் ரயிலில் தென்மலை ரயில் நிலையத்தில் இறங்கி தென்மலை கல்லடா அணைக்கட்டு பகுதிக்க பேரூந்து மற்றும் ஜீப் மூலம் சென்றடையலாம்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி













Click it and Unblock the Notifications