துபாயில் ஜெயலலிதா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தமிழர்கள்
துபாய்: துபாயில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது 65வது பிறந்தநாளை கடந்த மாதம் 24ம் தேதி கொண்டாடினர். தனது பிறந்நதநாளை விழாவாகக் கொண்டாட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டபோதிலும் அதிமுகவினர் விமரிசையாக கொண்டாடினர். அதிமுக நிர்வாகிகள் பால் குடம், காவடி எடுத்து ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை துபாயில் வாழும் தமிழர்களும் கொண்டாடியுள்ளனர்.

துபாயில் ஜெ. பிறந்தநாள் கொண்டாட்டம்
துபாய் தேரா அல்கஃபி அரங்கில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடினர்.

இரட்டை இலை கேக்
பிறந்தநாள் கேக்கில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை வரையப்பட்டிருந்தது.

கேக் வெட்டி கொண்டாட்டம்
விழாவில் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

கேக் சாப்பிடும் தமிழர்கள்
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் திரு. மோகன், திரு, ஷா, திரு. ரமணி, திரு. அருண், திரு. ஆனீஸ் பாய், திரு, கணேஷ், திரு, ஷமிம், திரு, அஜய், திரு. கள்ளகுறிச்சி ராமச்சந்திரன், திருமதி. லக்ஷ்மி ப்ரியா, திருமதி. பாரதி, திருமதி, நூர்ஜஹான், திருமதி, ஷர்மிளா, செல்வி. ஷப்னம், மாஸ்டர் அமர், மற்றும் அபுதாபி, ஷார்ஜா போன்ற இடங்களில் இருந்தும் வந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்கள் கேக் உண்டு மகிழ்கின்றனர்.












Click it and Unblock the Notifications