கருகிய அரும்புகள்:
அவர்கள்
சின்னஞ்சிறு மனிதர்கள்;
இன்றைய மொட்டுகள்;
நாளைய நம்பிக்கைகள்.
அவர்கள்
மாலையில் கிரிக்கெட்
விளையாடவோ,
டாம் அண்ட் ஜெர்ரி பார்க்கவோ,
சீயான் விக்ரம் ஆட்டத்தை
காணவோ நினைத்து
இருந்திருப்பார்கள்.
களைத்து வரும் பிள்ளைகளுக்கு
சிற்றுண்டி தந்துவிட்டு,
நாளை இவன் டாக்டர்
என்று கனவு காண
பெற்றோர்கள் நினைத்து
இருந்திருப்பார்கள்.
ஆனால், தீயின்
கோர நாக்குகளில் சிக்குண்டு
அடையாளந் தெரியாமல்
போவார்கள் என்று
யாரேனும் நினைத்ததுண்டா?
நாளைய நம்பிக்கையை இழந்த,
பெற்றோர்களை தேற்றலாம்தான்,
இத்துயரில் இருந்து
சீக்கிரம் நாம் மீண்டுவிட்டால்...!
வேறு எதையாவது நினைத்து
இதை மறக்கலாம் என்றால்,
எந்தத் தீயைப் பார்த்தாலும்
அந்தப் பிஞ்சுகள் நினைப்பு வருகிறதே!
ஆமாம், அக்னிதேவன்
அரக்கனானது எப்போது?
முன்னொரு காலத்தில்
நந்தனை எரித்த தீ,
அன்று யாழ்ப்பாண
நூலகத்தை கொளுத்திய தீ,
நேற்று ஜெயஸ்ரீயின்
சுற்றத்தையும் நட்பையும்
பொசுக்கிய தீ,
இன்று ஒரு பள்ளியை
மயனமாக்கிவிட்டது.
தீக்குள் விரல் வைக்கும்
இன்பம் எல்லாம்
போய்விட்டது பாரதி!
இப்போது எந்த
நெருப்பைப் பார்த்தாலும்
வெறுப்புதான் படர்கிறது.
- அனுஷிராம்([email protected])












Click it and Unblock the Notifications