மீண்டும்....மீண்டும்..
எனது சிதைகளினின்றே
அன்றைய எலும்புகளைப் பொறுக்கிக்கொண்டு
ஏன் இன்று சிறகடிக்கிறாய் ஃபீனிக்ஸாய்?
அன்று வடிந்த வெள்ளத்தின்
வண்டல்களில் பதிந்த உன் நகக்கீறல்களை
மீண்டும் வரையாதே என்கரைகளில்.
என் உறுதிகளாம் இரவுத்திரைகளை
உன் சிரிப்பின் ஒளிக்கீற்றால்
கிழிப்பதில் சிந்தும் ரத்தத்தில்
உன் வஞ்சகங்களின் நஞ்சு நீலமாய்.
பிரிவின் நினைவுகளே
என் தனிமையின் துணைகளானபின்
மீண்டும் நனவுகளின் நிழல்களால்
ஏன் என் கற்பனை விளக்குகளில்
இருள் பாய்ச்சுகிறாய்?
என்றேனும் இந்நிழல் நிஜமாகுமென்ற
அச்சத்திலேயே இதுகாறும்
ஒளி தவிர்த்தேன்
இந்நினைவுச்சிலைகள்மேல்.
பின்னரே புரிந்தது
தாங்கிய சிலைகள்
சிலுவைகளேயென..
நினைவுகள் உயிர்க்குமாயின்
நெஞ்சில்வேரூன்றி
உயிர் உறிஞ்சுமென்றஞ்சி
ஒவ்வொரு நினைவுத் துளிரையும்
துண்டித்தெறிந்தேன்..
வெட்டுப்பட்டது என் வேர்களேயென
அறியாமலேயே..
பயணப்படு..
இப்பதர்கள்
வேறு நிலங்களில் வளர்ந்து,
சாவிகளை அறுவடைக்கு
அனுப்பிவைக்க,
அறியாக் கிரகங்களின்
உதயங்களை கிரகணமடித்து
இருளை மேலும் கனக்கவைக்க,
உன் சிரிப்புகள் தேவைப்படும்
அயல்வெளிகளில்...
திரும்பி நீ வேறு உருக்கொண்டு
வந்திடுவாயென அறிந்த பின்பும்
வலுக்கட்டாயமாக விடையளிக்கிறேன்.
அன்றுவரை
அமைதியாக இறக்கவிடு..
என்னருகே என்னை












Click it and Unblock the Notifications