என் அன்புள்ள அஸ்திவாரமே.... இதோ உனக்காய் ஒரு கவி மாலை...!
தந்தையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரபு என்ற வாசர் கவிமாலை ஒன்றை தொடுத்துள்ளார்.
சென்னை: தந்தையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பிரபு என்ற வாசர் கவிமாலை ஒன்றை தொடுத்துள்ளார். இதே அந்த கவிதைத் தொகுப்பு உங்களுக்காக..
கவிதைகளும் காவியங்களும் போற்றி பேசும்
உன்னதமாய் தாயின் அன்பு..

தாயிற்கு இணையாய் அன்பினை பொழியும் தந்தையர் மட்டும் மறைக்கப்படுகின்றனர் அஸ்திவாரங்களாய்....
என் அன்புள்ள அஸ்திவாரமே.... இதோ உனக்காய் ஒரு கவி மாலை...
அந்தி சாயும் மாலை நேரம், எங்கள் ஆரவாரம் ஊரை கூட்டும்..
அக்காவோடு மல்லு கட்டி, தலையணை கொண்டு தம்பி அடித்து
நாங்கள் செய்யும் சேட்டை சத்தமோ வீட்டின் கூரை பிளக்கும்...
இந்த ஆர்ப்பரிக்கும் சத்தம் நடுவே இன்னிசையாய் செவியில் நுழையும்
அன்பு தந்தையின் மிதியடி ஓசை...
இன்னிசையாய் நுழைந்த ஒலி, இடியோசையாய் இதயத்தில் இறங்கும்..
ஆங்காங்கே பரவிகிடந்த பொருட்கள் யாவும் அது அதுவாய்
தானாக தன் இடம் போய் சேரும்.. சிதறி கிடந்த புத்தகமோ!
சட்டென எங்கள் மடியினில் தவழும்... இருவரி திருக்குறளை
இரு நூறு முறை எங்கள் உதடுகள் முணுமுணுக்கும்....
இதோ சிங்கத்தின் கர்ஜனையை நகல் அடித்தாற் போன்று
சின்னதொரு செருமல் இட்டு..அடர்ந்த மீசை முறுக்கி...
அழகாய் வருகிறார் எங்கள் அன்பு தந்தை..
பேசும் வார்த்தை தனில் கண்டிப்பு கலந்திடினும்...
அவர் கண்களிலே பாசம் தழும்பும்...
அவர் தன் சட்டை பையில் கை விட்ட மறு நொடியே...
எங்கள் நாவினிலே நீர் சுரக்கும்...அழகாய் அனைவருக்கும்
சமமாய் பகிர்ந்தளிப்பார் நாடார் கடை கமர்கட்டு மிட்டாயை...
திருவிழாக்கள் எனும்போதே உள் நெஞ்சில் சாரல் அடிக்கும்...
கடலென கூட்டமிருந்தாலும் வாரணம் ஏறியமர்ந்த கோவினை போல்
என் தந்தை தோள் மீதமர்ந்து பவனி வருவேன்.. அழகிய அற்புதமாய் நெஞ்சில் நிறைந்த நாட்கள் அவை....
காலன் அவன் சதி வலையால் கடந்திட்டன வருடம் பல...
கல்லூரி முடித்து கணினி தட்டி யானும் ஆகினன் பொறியாளனாய்...
சொந்த விருப்புடனே நாடு கடத்த பட்டேன் எதிர்காலம் கருதி...
சுயமரியாதை பெற்றேன்.. என் சுயத்தை இழந்தேன்...
இதோ மாதம் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு செல்கின்றேன்...
மைந்தனாய் அல்ல ஒரு விருந்தினனாய்....
என் அன்புள்ள அஸ்திவாரமே... என் தந்தை நீ என்று சொல்லி ஊரெல்லாம் பெருமை கொள்கிறாய்... ஆனால் உன் மைந்தன்
யானென சொல்லி உந்தன் மடி சாயவே உள்ளம் ஏங்குதிங்கே.. கண்ணில் பட்ட பொருட்களெல்லாம் வாங்கும் திறன் வந்தாலும் உள் மனது இன்னமும் நீங்கள் தரும் கமர்கட்டுகாய் ஏங்கி நிற்கும்...
வருடங்கள் பல ஓடியதால் வளர்ந்திட்டது உடல் மட்டும்... உள்ளம் மட்டும் இன்னமுமே மருகுகிறது ஒரு மழலை போல்...
என் சுட்டு விரல் முன் நீட்டி காத்திருக்கிறேன் உனக்காக...
என் விரல் பற்றி தலை கோதி அழைத்து செல்வாயா மீண்டும்
கடந்து வந்த அந்த அழகிய உலகிற்கு...
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications