Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aippasi Month Rasi Palan 2020: ஐப்பசி மாதத்தில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்

ஐப்பசி மாதம் துலாம் மாதம். சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். ஐப்பசி மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீச்சம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ஐப்பசி மாதத்தில் நவ கிரகங்கள் செவ்வாய் பகவான் மீனம் ராசியில் வக்ரமடைந்துள்ளார். ரிஷபத்தில் ராகு, சிம்மத்தில் சுக்கிரன் கன்னி ராசியில் வக்ர புதன், துலாம் ராசியில் சூரியன், விருச்சிக ராசியில் கேது, தனுசு ராசியில் குரு, மகரம் ராசியில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

நவ கிரகங்களின் இடமாற்றம் இந்த மாதம் சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். வக்ரமடைந்த புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு வாக்கிய பஞ்சாங்கப்படி மாத இறுதியில் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கிரகங்களின் இடமாற்றம் சஞ்சாரத்தினால் தனுசு,மகரம்,கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதத்தில் ராசியில் குருபகவான் சஞ்சரிப்பதால் புகழ் பெயர் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். நன்மைகள் அதிகரிக்கும். தடைபட்டு வந்த திருமணம் நிச்சயமாகும். ராசிக்கு இரண்டில் சனி சஞ்சரிப்பதால் தேவையில்லாத பேச்சுக்கள் தவிர்க்கவும் கோபப்பட்டு பேசி பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் வரும். அரசு பணியாளர்கள் மூலம் நன்மை ஏற்படும். பதவி உயர்வுகள் இடமாற்றம் ஏற்படும். எந்த தொழில் செய்தாலும் லாபம் வரும். பெண்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மனைவிக்கு உடல் நலம் பாதிக்கும். நரம்பு பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. மனைவி வழி சொந்தங்கள் மூலம் பிரச்சினை வரலாம். குரு வீட்டில் செவ்வாய் வக்ரமடைந்திருப்பதால் உடன் பிறந்தவர்களிடம் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் நீங்கும் சகோதரர்கள் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நீங்கி முன்னேற்றம் அதிகமாகும். சந்திராஷ்டமம் நாட்கள் பார்த்தால் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் ஐப்பசி 24 திங்கட்கிழமை அதிகாலை 4.51 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதத்தில் ராசிக்கு சனி, விரைய ஸ்தானத்தில் குரு, மூன்றாம் வீட்டில் செவ்வாய் பத்தாம் வீட்டில் சூரியன், சூரியன் நீசம் பெற்றிருந்தாலும் அப்பாவிற்கு புதிய பொறுப்புகள் நீங்கும். சம்பளம் அதிகரிக்கும். புரமோசன் கூடும். உங்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள், சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைவதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். சிலர் பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனங்களை வாங்கலாம். வெளிநாடு ஏற்றுமதி இறக்குமதி லாபம் கொடுக்கும். கோர்ட் கேஸ் பிரச்சினைகள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை மருத்துவ செலவுகள் வரலாம் கவனமாக இருக்கவும். ஐப்பசி 24 திங்கட்கிழமை அதிகாலை 4 மணி 51 நிமிடம் முதல் ஐப்பசி 26 ஆம் தேதி புதன்கிழமை காலை 8.38 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். பத்ரகாளி அம்மனை இந்த மாதம் முழுவதும் வணங்கலாம் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

 கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே பாக்ய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அப்பாவின் வழி உதவிகள் கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். பிதுர் ராஜ்ஜித சொத்துக்கள் தேடி வரும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரும். தொழிலில் பிரச்சினைகள் வம்பு வழக்கு வரும். வாகன பழுதுகள் நீங்கும். செவ்வாய் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் மருத்துவ செலவுகள் குறையும். பூமி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சகோதர சகோதரிகளின் மூலம் உதவிகள் தேடி வரும். உடல் உபாதைகள் விலகும். தோல் நோய்கள் நீங்கும். வெளிநாடு போகும் அமைப்பு வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் வரும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும் மாதம். இந்த மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை காலை 8 மணி 38 நிமிடம் மணி முதல் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி 14 நிமிடம் வரை சந்திராஷ்டமம் உள்ளது எச்சரிக்கை தேவை. பெருமாளை வணங்கினால் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே, இந்த ஐப்பசி மாதத்தில் உங்களுக்கு ராசியில் செவ்வாய் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார் சூரியன் எட்டாம் இடத்தில் நீசமடைந்து சஞ்சாரம் செய்கிறார். குரு பத்தாம் வீட்டிலும் சனி லாப ஸ்தானத்திலும் பயணம் செய்கிறார். சொத்துக்களில் இருந்த வில்லங்கம் பிரச்சினைகள் நீங்கும். பூமி வாங்கலாம், புதிய சொத்துக்கள் வாங்கலாம். யோகங்கள் நிறைந்த மாதம் புதிய சொத்துக்கள் வீடு வாங்கலாம். சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடைபெறும். மருத்துவ செலவுகள் நிவர்த்தியாகும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் தேடி வரும். தன தான்ய லாபம் உண்டாகும். தொழில் வியாபார விருத்தி ஏற்படும். வியாபாரத்தில் வாங்கி வைத்த பொருட்கள் விற்று தீரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. மருத்துவ செலவுகள் வரும். வெளிநாட்டில் இருந்து வரும் செய்திகள் நன்மையை தரும். களத்திர காரகன் சுக்கிரனால் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி அந்நியோன்னியம் அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு சிறப்பான யோகங்கள் கொண்ட மாதம். வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி உடல் ஆரோக்கியத்தில் கவனம். உடல் உஷ்ணம் கூடும் மருத்துவ செலவுகள் வரலாம். அரசு பணியாளர்கள் எச்சரிக்கை தேவை. வம்பு வழக்கு பிரச்சினைகள் நீங்கும். ஆன்மீக பயணம் மன அமைதியை தரும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலரது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். உங்க ராசிக்கு இந்த மாதம் ஐப்பசி 1ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 3 மணி 7 நிமிடம் முதல் ஐப்பசி 3ஆம் தேதி 5 மணி 27 நிமிடம் வரை ஐப்பசி 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி 17 நிமிடம் முதல் ஐப்பசி 30ஆம் தேதி பகல் 1 மணி 37 நிமிடம் வரை சந்திராஷ்டமம் உள்ளது கவனமும் எச்சரிக்கையும் தேவை. சிவபெருமானை வணங்குங்கள். பௌர்ணமி தினத்தில் சிவன் கோவில் சென்று அன்னதானம் சாப்பிட்டு வர உணவு மூலமாக ஏற்படும் நோய்கள் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+