குரு பெயர்ச்சி பலன் 2023: பொன்னாக ஜொலிக்கும் ராசிக்காரர்கள்..3 ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட்!
மதுரை: குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலம் பெறும் என்பார்கள். குருவிற்கு ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வை உண்டு. இம்முறை குரு மேஷம் ராசியில் இருந்து சிம்மம், துலாம், தனுசு ராசிகளை பார்க்கிறார். குருவின் பார்வையால் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.
பொன்னவன் என வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. எனவேதான் திருமணம், குழந்தை பாக்கியம், வேலையில் உயர்வு, வருமானத்தில் உயர்வு, நோய் நொடியற்ற வாழ்க்கை வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ராஜயோகம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு தடைகள் விலகும் காலம் வந்து விட்டது. குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். கூடவே மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்வையிடுகிறார். அதிர்ஷ்டமும் நன்மைகளும் தேடி வரப்போகிறது. வருமானம் கூடும். புதிய திருப்பம் ஏற்படும். ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் குரு அக்டோபர் மாதம் வரை ராகு உடன் பயணம் செய்கிறார். பாக்ய குரு உங்களுக்கு நிறைய பாக்யத்தையும் தேடித்தருவார். சுபங்கள் அதிகம் நடைபெறும் காலம். ஓராண்டு காலத்திற்கு ராஜயோகம்தான். கடன்களை அடைக்க நிறைய வருமானத்தை தரப்போகிறார்.
திருமணம் கைகூடும்: குரு பார்வை பலம் இருந்தால்தான் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிம்மம் ராசியை குரு பார்ப்பதால் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். நட்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும்.
அதிகார பதவி: சிம்ம ராசிக்காரர்களுக்கு மூன்றாம் வீட்டில் குரு பார்வை விழுகிறது. சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் நடக்கும் திருமணம் நடைபெறும். ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். சொந்த வீடு கட்டுவீர்கள் சொத்து சுகம் வாங்கும் யோகம் வரும் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு அதிகார பலம் ஆளுமை புகழ் கீர்த்தியை தரும். உயர்ந்த அந்தஸ்தை தரும். குரு பார்வையால் வேலை இல்லாதவர்களுக்கு வேலையை கொடுப்பார்.
துலாம்: குரு உங்கள் ராசியை தன்னுடைய ஏழாம் பார்வையால் நேரடியாக பார்க்கிறார். திடீர் மாற்றங்களை கொண்டு வரும். குரு பலனால் திருமண யோகம் கைகூடி வரப்போகிறது.குரு பார்வை ராசிக்கு மூன்றாமிடத்தில் பதிகிறது. சகோதர சகோதரிகளிடம் இருந்த பிரச்சினைகள் தீரும். சந்தோசங்களையும் ஆதவுகளையும் கொடுப்பார்கள். உங்கள் ராசிக்கு 11ஆம் இடமான சிம்ம ராசியில் குருவின் பார்வை பதிவதால் லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். அரசியல் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு நன்மையை தரும். சினிமா துறையில் நுழைய விரும்புபவர்களுக்கு உற்சாகத்தை தரும். பயணங்கள் செய்பவர்களுக்கு நன்மை நடைபெறும். வருடம் முழுவதும் வருமானம் நிறைந்த ஆண்டாக அமையும். செய்யும் தொழிலில் லாபத்தை தரும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும், அறிவித்திறன் அதிகரிக்கும். சனி சிக்கல்களை உருவாக்கினாலும் குருவினால் பாதிப்புகள் குறையும்.
தனுசு: குரு பெயர்ச்சி புண்ணியங்கள் நிறைந்த ஆண்டாக தனுசு ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது. ஐந்துக்கு அதிபன் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது பூர்வ ஜென்ம புண்ணியம் தேடி வரும். குரு பகவான் உங்க ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் மனதில் உள்ள எண்ணங்கள் ஆசைகள் நிறைவேறும். நீங்க ஆசைப்பட்டது எல்லாம் நிறைவேறும். குருவின் ஆதரவு அற்புதமாக இருக்கும். பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு நன்மை செய்யும்.

பதவி உயர்வு தேடி வரும்: திருமணமாகி பல ஆண்டு காலமாக குழந்தை இல்லையே என்று தவித்தவர்களுக்கு குரு இந்த முறை குழந்தை பாக்கியத்தை கொடுப்பார், திருமணத்தை நடத்தி கொடுப்பார். வெளிநாடு யோகத்தை கொடுப்பார். வேலை உயர்ந்த பதவி உயர்வோடு கூடிய வருமானம் கூடும். பரிபூரண ராஜயோகம் உங்களுக்கு வரப்போகிறது.
ஜாக்பாட்: குரு உங்களுடைய லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் வருமானத்தில் லாபத்தை தருவார் நல்ல ஆளுமைத்தன்மையை தருவார். பாக்ய ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் அப்பாவின் ஆதரவு கிடைக்கும். புகழும் கீர்த்தியும் தேடி வரும். அப்பாவினால் சொத்துக்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களுக்கு இரண்டாம் திருமண வாய்ப்பும் தேடி வரும். செப்டம்பர் முதல் டிசம்பர் வரைக்கும் குரு பகவான் வக்ரகதியில் பயணம் செய்தாலும் உங்களுக்கு குரு பகவானின் பார்வையால் திடீர் ஜாக்பாட் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications