பார் புகழும் பழனியில் முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் இன்று பங்குனித்தேரோட்டம் -பக்தர்கள் கோலாகலம்
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, பழனியில் நேற்று திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இன்று பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது.
பழனி: முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் திருஆவினன்குடி கோயில் முன்பாக நேற்று நடைபெற்றது. முன்னதாக முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானைக்கு, பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேதபாராயணங்கள் பாட, மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, முத்துக்குமார சுவாமி, அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தர்கள் வடம்பிடித்து வெள்ளித்தேரை கிரிவலப்பாதையில் இழுத்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில், பழனி கோயில் பொறுப்பு இணை ஆணையர் குமரகுரு, துணை ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர் குழுவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது. கிரிவீதியில் ஆடி அசைந்து வலம் வந்த தேரினை ஏராளமான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications