நாக சதுர்த்தி, நாகபஞ்சமி கருட பஞ்சமி : நாகரை விரதமிருந்து வணங்கினால் சுபகாரியத் தடைகள் நீங்கும்
நாக தோஷம் விலக நாக சதுர்த்தி, நாக பஞ்சமி நாளில் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபட தோஷம் விலகி திருமணம் கைகூடும், கணவன் ஆயுள் அதிகரிக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தடைபட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும்.
மதுரை: இந்து சமயத்தில் பாம்புக்கும், கருடருக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தியாவும், வளர்பிறை பஞ்சமி நாக பஞ்சமியாகவும் கடைபிடிக்கப்படுகிறது. சனிக்கிழமையன்று கருட ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் விரதமிருந்து நாகர் புற்றுக்கு பாலூற்றி வழிபட நாக தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெறும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பாம்பென்றால் படையும் நடுங்கும் அதே போல பாம்பு கிரகங்களான ராகு கேது தோஷத்தினால் பலவித தடைகளும் ஏற்படுகின்றன. நாக பஞ்சமி நாளில் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபட தோஷம் விலகி திருமணம் கைகூடும், கணவன் ஆயுள் அதிகரிக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தடைபட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கவும், ஜாதகத்தில் உள்ள நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் விலகவும் நம்முடைய வீட்டிலேயே நாக சதுர்த்தி, நாக பஞ்சமி கருட பஞ்சமி விரதங்களைக் கடைபிடிக்கலாம்.

நாக பஞ்சமி புராண கதை
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.

தடைகள் நீங்கும்
சிலரது ஜாதகத்தில் நாக தோஷங்கள் இருக்கும். கால சர்ப்ப தோஷத்தின் காரணமாக சிரமப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். தோஷம் இருப்பவர்கள் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி விரதம் கடைபிடிப்பதன் மூலம் தடைகள் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

தோஷங்கள் நீக்கும் நாக சதுர்த்தி வழிபாடு
நாக சதுர்த்தி நாளில் வீட்டில் பூஜை செய்து வழிபடலாம். சிறிய வெள்ளி அல்லது செம்பில் செய்த நாகருக்கு வீட்டிலேயே பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பூக்களால் அர்ச்சனை செய்யலாம், பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபடலாம். இதன் மூலம் நாக தோஷங்கள் நீங்கி குழந்தைகளுக்கும், கணவருக்கும், சகோதரர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெரிய அளவில் அபிஷேகம் செய்ய முடியாவிட்டாலும் நாகர் படத்தின் முன்பு ஒரு டம்ளர் பால் வைத்து வழிபாடு செய்யலாம். இதன் மூலம் தலைமுறை தலைமுறையாக இருக்கும் பாவங்கள் கூட நீங்கி விடும் என்பது நம்பிக்கை.

நாகர்களை வணங்குவோம்
நாக சதுர்த்தி தினமான இன்று நாகர்களின் புராணத்தை படித்து நாகராஜா காயத்ரி மந்திரம் கூறி வழிபட தோஷங்கள் நீங்கும். "ஓம் சர்பராஜாய வித்மஹே நாகராஜாய தீமஹி தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்" என கூறி நாகர்களை வணங்க வேண்டும். சர்பங்களுக்கெல்லாம் தலைவனான நாக ராஜனே உங்களை வணங்குகிறேன். நித்தமும் உங்களை நினைக்கும் இந்த அடியேனுக்கு ஆசி வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன். என்று வேண்டிக்கொண்டால் ராகு தோஷமும் நாக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கும்.

பட்சி ராஜா கருடன்
நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம். கருடன் என்று போற்றப்படும் பறவையை பட்சி ராஜா அதாவது பறவைகளின் தலைவன் என்று சொல்வார்கள். சாஸ்திர சம்பிரதாயங்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஒரு விசேஷமான பறவை. பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம் சொல்லில் அடங்காது. அவருக்கென்றே கருடபஞ்சமி என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கருட தரிசனம்
கருட பஞ்சமி நாளில் பெண்கள் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

கூட்டு பிராத்தனை
நாக சதுர்த்தியை முன்னிட்டு இன்று தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நாகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கருடபஞ்சமி நாளான நாளைய தினம் குழந்தை வரம் வேண்டியும், ஆண் பெண் திருமணம் வேண்டியும், மேலும் நற்பலன்கள் பெறவும் நாகரையும், கருடனையும் வேண்டி தன்வந்திரி பகவான் ஆலயத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெறுகின்றன. இதில் நாக தோஷம் நீங்குவதற்கும், பக்ஷி தோஷங்கள் அகலவும், வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், ராகு கேது கிரங்கள் மற்றும் பிற நாக தோஷங்கள் விலக வேண்டியும், குடும்பத்தில் சுபிட்சம் உருவாகவும், பிறக்கும் குழந்தைகள் அறிவும் வீரமும் உடையவர்களாக விளங்கவும், ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications