For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் மீண்டும் தீ விபத்து ஏற்படும்- பஞ்சாங்கம் கணிப்பு

மதுரையில் மீண்டும் தீ விபத்து ஏற்படும் என்று 2018 - 19 ஆண்டு தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளதாக வாட்ஸ் அப்பில் வைரலாகிறது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது ஆட்சிக்கும் ஆள்பவர்களுக்கும் ஆபத்து என்று கூறி வருவதால் பலரும் பீதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் மதுரை நகரில் தீ விபத்து ஏற்படும் என்று பஞ்சாங்கத்தில் கணித்துள்ளது.

மதுரை மாநகரில் உலகப்புகழ் பெற்ற கோவில் மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோவில் சமீபத்தில் விருது பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்குள் அக்டோபர் மாதம் மழை வெள்ளம் புகுந்தது. அப்போதே பக்தர்கள் பீதிக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்து வீரவசந்தராயர் மண்டபத்தை சேதப்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்காக புறாக்களும் மடிந்து போனது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மழை, வெள்ளம் கணிப்பு

மழை, வெள்ளம் கணிப்பு

தமிழ் பஞ்சாங்கத்தில் சென்னை மழை வெள்ளம் பற்றி கணித்திருந்து. அது போலவே மழை வெள்ளம் சென்னையை தாக்கியது. இதனையடுத்து பஞ்சாங்கம் கணிப்பை கவனிக்க ஆரம்பித்தனர்.

பஞ்சாங்கம் கணிப்பு

பஞ்சாங்கம் கணிப்பு

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பஞ்சாங்கத்தில் மதுரையில் தீ விபத்து ஏற்படும் என்று கணித்துள்ளது. தனுசு ராசியில் சனி அமர்ந்திருக்கிறார். பிப்ரவரி 2019ல் கும்ப ராசியில் சூரியன் புதன் அமர்ந்திருக்கின்றனர்.
மேஷ ராசியான நெருப்பு ராசியில் நெருப்பு கிரகம் செவ்வாய் அமர்ந்திருக்க மகரத்தில் கேது, கடகத்தில் ராகு அமர்ந்துள்ளனர். தனுசு ராசியில் சுக்கிரன் அமர்ந்திருக்க, விருச்சிகத்தில் குரு அமர்ந்துள்ளார். தனுசு ராசியில் சனி, சுக்கிரன் அமர்ந்துள்ளனர்.

குரு, ராகு கேது பெயர்ச்சி

குரு, ராகு கேது பெயர்ச்சி

2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. கேது தனுசு ராசிக்கும் ராகு மிதுன ராசிக்கும் நகர்கிறார். குரு பகவான் அதிசாரத்தில் தனுசு ராசியில் சனியோடும் கேது உடனும் அமரப்போகிறார். இதனால் பூமி அதிர்ச்சி, இடி முழக்கம், உஷ்ண காற்று அதிக வெயில் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. குஜராத்தில் தீ விபத்தில் ஏற்படும் என்று கணித்துள்ளது.

அச்சம் வேண்டாம்

அச்சம் வேண்டாம்

இந்த பஞ்சாங்கத்தின் பக்கம் இப்போதே வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. பஞ்சாங்கம் பணிப்பு பலித்து மிகப்பெரிய ஆபத்து, தீ விபத்து ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டாம். மீனாட்சி அம்மன் மதுரை மக்களை கண்ணுக்குள் வைத்து காப்பாற்றுவார் என்று நம்புவோம்.

English summary
2018 -19 Tamil Panchangam predictions fire in Madurai.Heat wind fire accident in Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X